மத்திய பிரதேசம் மோரினா மாவட்டத்தை தலைமையிடமாக கொண்டு கலப்பட பால் விற்பனை செய்வதாக மத்திய பிரதேச மாநில போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இந்த தகவலை தொடர்ந்து நேற்று முன்தினம் சுமார் 12-க்கும் மேற்பட்ட இடங்களில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.அந்த சோதனையில் 10,000 லிட்டர் கலப்பட பால் பறிமுதல் செய்தனர்.
பறிமுதல் செய்த அந்த கலப்பட பாலில் ஷாம்பு ,சோப்பு பவுடர் , சோடியம் தையோசல் போன்ற ரசாயன பொருள்கள் கலந்து இருந்தது ஆய்வில் தெரியவந்தது.மத்திய பிரதேசத்தில் இருந்து டெல்லி, உத்தரபிரதேசம் , ராஜஸ்தான், ஹரியானா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இந்த கலப்பட பால் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது தொடர்பாக 62 பேர் கைது செய்துள்ளனர்.
இது குறித்து போலீசார் கூறுகையில் , சுமார் 30 சதவீத பால் மற்றும் 70 சதவீத மலிவான ரசாயனங்களைப் பயன்படுத்தி இந்த கலப்பட பால் தயார் செய்கின்றனர்.அந்த ஒரு லிட்டர் கலப்பட பால் செய்ய 5 ரூபாய் செலவாகிறது. ஆனால் அந்தப் பாலை 40 முதல் 50 ரூபாய் வரை விற்பனை செய்கின்றனர். இவர்கள் சந்தையில் பிரபலமாக இருக்கும் நிறுவங்களின் பெயரை கொண்டு இந்த கலப்பட பால் விற்பனை செய்து வருகிறார்கள் என கூறினர்.
சென்னை : சினிமாவில் பொதுவாகவே ஒரு நடிகர் நடிக்கும் படங்கள் பெரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றாலே அவர்கள் அடுத்ததாக நடிக்கும் படங்களின்…
சென்னை : பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்த சம்பவத்தில்…
பஞ்சாப் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நின்றாலும் இன்னும் இந்த தலைப்பு தான் உலக அளவில் ஹாட் டாப்பிக்கான…
பஞ்சாப் : நடப்பாண்டு ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், கடந்த மே 8-ஆம் தேதி இந்தியா-பாகிஸ்தான் இடையேயான…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.…
சென்னை : கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் பெண்களை வீடியோ எடுத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த…