உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள பாக்பத்தில் கல்லறையிலிருந்து துணிகளை திருடி விற்பனை செய்ததாக 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள பாக்பத் எனுமிடத்தில் உள்ள பாரத் அலோக் சிங்கின் வட்டார அலுவலர் காவல்துறையில் ஒரு உள்ளூர் துணி வியாபாரி மற்றும் அவரது உதவியாளர்கள் மீது புகார் அளித்துள்ளார். அதாவது கல்லறையில் உள்ள இறந்தவர்களின் துணிகளை திருடி அவற்றை விற்பனை செய்வதாக கூறியுள்ளார். மேலும் இவர்கள் இப்போதல்ல கடந்த 10 ஆண்டுகளாக இவ்வாறு செய்து வருவதாகவும், துணி வியாபாரி தனது உதவியாளர்களுக்கு தினமும் 300 ரூபாய் கூலியாக கொடுத்து இந்த வேலையை செய்ய சொல்வதாகவும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்நிலையில், இது குறித்து விசாரித்த காவல்துறையினர் 7 பேரை கைது செய்துள்ளனர். அதாவது துணி வியாபாரி பிரவீன் ஜெயின் மற்றும் அவரது மகன் ஆஷிஷ் ஜெயின் அவரது மருமகன் ஷெரிப் ஜெயின் மற்றும் உதவியாளர்கள் ஆகிய ராஜு ஷர்மா, ஷ்ரவன் ஷர்மா மற்றும் சாருக்கான் உள்ளிட்ட 7 பேரை போலீசார் அடையாளம் கண்டு கைது செய்துள்ளனர். இவர்கள் பல்வேறு சட்டைகள், தோத்திகள், குர்தாக்கள் ஆகியவற்றை கல்லறையில் இருந்து திருடி அவற்றிற்கு வேற ஒரு நிறுவனத்தின் பெயர்களை ஸ்டிக்கர்களை ஒட்டி விற்பனை செய்து வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
பிகார் : இந்த ஆண்டு இறுதியில் பீகார் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இன்று காலை தர்பங்காவில் 'சிக்ஷா நியாய் சம்வாத்'…
டெல்லி : தமிழ்நாடு ஆளுநர் விவகாரத்தில், ஆளுநர்கள் அனுப்பும் மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் குடியரசுத் தலைவர் முடிவெடுக்க, உச்ச…
ஸ்ரீநகர் : இந்தியா vs பாகிஸ்தான் போர் நிறுத்தம் செய்யப்பட்டதை தொடர்ந்து முதல் முறையாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்…
டெல்லி : கடந்த மே 13ம் தேதி இந்தூரின் மோவில் நடந்த அரசு விழாவில் உரையாற்றிய பாஜக அமைச்சர் விஜய்…
ஊட்டி : நீலகிரி மாவட்டம் உதகை தாவரவியல் பூங்காவில் 127-வது மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இன்று…
காசா : கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், காசாவின் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது வான்வழி தாக்குதல் நடத்தியது. இதில்…