Haryana [file image]
சென்னை : ஹரியானாவில் லாரி மீது மினி பேருந்து மீது மோதியதில் 7 பேர் உயிரிழந்தனர்.
ஹரியானா மாநிலம் அம்பாலாவில் (மே 24) வெள்ளிக்கிழமை அதிகாலையில் நின்று கொண்டு இருந்த லாரி ஒன்று மீது மினி பேருந்து மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும், இந்த விபத்தில் 25 பேர் காயமடைந்துள்ளனர்.
அம்பாலா-டெல்லி-ஜம்மு தேசிய நெடுஞ்சாலையில் வைஷ்ணோ தேவி கோவிலுக்கு மினி பேருந்தில் பக்தர்கள் சென்று கொண்டு இருந்தார்கள். அப்போது திடீரென பேருந்து அம்பாலாவில் உள்ள என்டிஐ பிளாசா மொஹ்ரா அருகே ஜிடி சாலையில் நின்று கொண்டு இருந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.
விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் காவல்துறையினருக்கு தகவலை கொடுத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த காவல்துறையினர் விபத்தில் சிக்கி இருந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், சம்பவம் குறித்து அம்பாலா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தில் உயிர் பிழைத்த ஒருவர் கூறுகையில், டிரைவர் குடிபோதையில் இருந்ததாகவும், விபத்து நடந்த உடனேயே அங்கிருந்து தப்பியோடிவிட்டதாகவும் கூறினார்.
சிட்னி : ஆஸ்திரேலிய அரசு, 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ஸ்னாப்சாட், டிக்டாக், மற்றும் எக்ஸ் ஆகிய சமூக வலைதளங்களைப்…
சென்னை : இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள மதராஸி திரைப்படம் வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி மிகப்பெரிய…
சென்னை : தேசிய ஜனநாயக கூட்டணியில் (NDA) இருந்து முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) வெளியேறியது குறித்து தமிழக…
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, 01-08-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன்…
லண்டன் : இங்கிலாந்துக்கு எதிராக நடந்து வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி, நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர்…
சென்னை : இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் நடித்த ‘தலைவன் தலைவி’ திரைப்படம்…