ஓடும் ரயிலில் இளம்பெண் 8 பேரால் கூட்டு பாலியல் பலாத்காரம்..!

Default Image

மும்பை நோக்கி சென்ற ரயிலில் 20 வயது பெண் 8 கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.

லக்னோ-மும்பை எக்ஸ்பிரஸ் ரயிலில் ஒரு பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் இகத்புரி மற்றும் காசரா நிலையங்களுக்கு இடையே நடந்தது. இந்த சம்பவத்தில் இருவரையும் ரயில்வே போலீசார் கைது செய்துள்ளனர். முதற்கட்ட தகவலின்படி, லக்னோ-மும்பை  எக்ஸ்பிரஸ் ரயில் மாலை 6 மணியளவில் இகத்புரி ஸ்டேஷனை அடைந்தது. இகத்புரி நிலையத்தில் இருந்து மும்பை நோக்கி வந்துகொண்டிருந்த ரயில் இகத்புரி நிலையத்திலிருந்து புறப்பட்டு சுரங்கப்பாதையை நெருங்கியது.

அந்த நேரத்தில் ரயில் மெதுவாக இயங்கிய நேரத்தில் 8 கொள்ளையர்கள் ரயிலில் ஏறினர். கொள்ளையர்கள் ரயிலில் 15 முதல் 20 பயணிகளிடம் இருந்து  மொபைல்களையும், பணத்தையும் பறித்தனர். அவர்கள் எதிர்த்த பயணிகளை அடித்துள்ளனர். கொள்ளையர்களின் கைகளில் ஆயுதங்கள் இருந்தாக கூறப்படுகிறது. இருப்பினும் அதிர்ச்சி தரும் வகையில், கொள்ளையர்கள் ரயிலில் இருந்த 20 வயது இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

இதையெடுத்து, பயணிகள் இரண்டு கொள்ளையர்களையும் பிடித்தனர். ரயில் கல்யாண் ஸ்டேஷனை அடைந்தவுடன் போலீசார் கொள்ளையர்களை கைது செய்தனர். மீதமுள்ள குற்றவாளிகளை போலீசார் தேடும் போது இரண்டு கொள்ளையர்கள் கல்யாண் காவலில் உள்ளனர் என்பது முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து கல்யாண் ரயில்வே குற்றப்பிரிவு விசாரணை நடத்தி வருகின்றன.

இந்த சம்பவம் மீண்டும் ரயில் பயணிகளின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news 2
suseenthiran
BJP WIN
IND vs ENG 2nd ODI cricket match
V. C. Chandhirakumar win
rohit sharma Kevin Pietersen