கிணற்றில் விழுந்த 8 வயது சிறுமியை பார்க்க வந்தவர்களுக்கு நேர்ந்த விபரீதம்.
மத்திய பிரதேச மாநிலத்தில், விடிஷாவில் நேற்று மாலை 8 வயது சிறுமி ஒருவர் கிணற்றின் அருகே விளையாடிக்கொண்டிருந்த போது தவறுதலாக விழுந்துள்ளார். இந்த தகவல் கிராமம் முழுவதும் பரவிய நிலையில், கிணற்றில் விழுந்த சிறுமியை பார்க்க கிணற்றை சுற்றி பெரிய கூட்டம் கூடியுள்ளது.
அந்த கிணற்றை சுற்றி ஒரு பெரிய கூட்டமே கூடி நின்று உள்ளது. இந்நிலையில் கிணற்றின் ஒரே சுவற்றில் 40க்கும் மேற்பட்டோர் சாய்ந்து நின்று கொண்டிருந்த போது அந்த சுவர் திடீரென சரிந்தது. இதனால் 40 பேர் கிணற்றுக்குள் தவறி விழுந்ததாக கூறப்படுகிறது. 40 அடி ஆழமுள்ள கிணற்றில் ஏராளமானோர் விழுந்து உயிருக்கு போராடிய நிலையில் அவர்களை மீட்கும் பணியில் மீட்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
தற்போதுவரை 23 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ள நிலையில், அவர்களில் 13 சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் மற்றவர்களை மீட்பதற்காகவும் மீட்புப் படையினர் தொடர்ந்து போராடி வருகின்றனர். இதுவரை மூன்று பேரின் உடல்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக, அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் விசாரணை நடத்துமாறு உத்தரவிட்டுள்ளார்.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…