ரூ.24 ஆயிரம் கோடி மதிப்பிலான 9 திட்டங்கள்.! பிரதமர் மோடி உத்தரவு.!

Published by
பாலா கலியமூர்த்தி
  • டெல்லியில் நேற்று 32-வது பிரகதி ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அதில் மத்திய, மாநில அரசு அதிகாரிகள் மற்றும் பிரதமர் மோடி உட்பட பல அமைச்சர்கள் கலந்துகொண்டனர்.
  • அப்போது கூட்டத்தில் 24 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான தாமதமான 9 திட்டங்களை துரிதப்படுத்த அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டார்.

டெல்லியில் நேற்று 32-வது பிரகதி ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அதில் மத்திய, மாநில அரசு அதிகாரிகள் மற்றும் பிரதமர் மோடி உட்பட பல அமைச்சர்கள் கலந்துகொண்டனர். அப்போது கூட்டத்தில் 24 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான 9 திட்டங்கள் தாமதமானது குறித்து அதிகாரிகள், அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். பின்னர் ரயில்வே, சாலை போக்குவரத்து, பெட்ரோலியம் ஆகிய துறைகளில், தாமதமான 9 திட்டங்களை வேகமாக நடைமுறைப்படுத்த அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டார்.

இந்நிலையில், கடந்த முறை நடைபெற்ற பிரகதி ஆய்வுக் கூட்டத்தில் 12 லட்சத்து 30 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புடைய 269 திட்டங்கள் குறித்து பிரதமர் மோடி ஆய்வு செய்திருந்தார். மேலும் மத்திய, மாநில அரசு அதிகாரிகள் கொண்ட குழுவான பிரகதி –  இது மத்திய அரசு அறிவிக்கும் நலத் திட்டங்களை செயல்படுத்துவதற்கான வழிமுறைகளை வகுக்க அமைக்கப்பட்டுள்ளது என குறிப்பிடப்படுகிறது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…

14 hours ago

”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!

வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…

15 hours ago

”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…

15 hours ago

”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!

சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…

16 hours ago

பாக். தாக்குதல்.. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் – உமர் அப்துல்லா அறிவிப்பு.!

காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…

17 hours ago

பாகிஸ்தான் தாக்குதல்., காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்!

காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…

19 hours ago