கேரள மாநிலம், எர்ணாகுளம் பகுதியைச் சேர்ந்தவர் நிதின். இவர் அங்குள்ள காக்க நாடு பகுதியை சேர்ந்த 17 வயதுள்ள பெண்ணை காதலித்து வந்துள்ளார்.
இவர் அந்தப் பெண்ணிடம் பலமுறை தனது காதலைத் தெரிவித்துள்ளார். ஆனால் அவரின் காதலுக்கு அந்த பெண் மறுப்பு தெரிவித்து வந்த நிலையில், நேற்று நள்ளிரவு அந்த பெண்ணின் வீட்டிற்கு நிதின் சென்றார்.
வீட்டில் இருந்து வெளியே வந்த அவரின் தந்தையிடம் அப்பெண்ணைப் பார்க்க வேண்டும் என கூறினார். இதனையடுத்து வெளியே வந்த அந்தப் பெண் மீது அவர் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை ஊற்றி அப்பெண் மீது தீ வைத்துள்ளார். மேலும், அவர் உடல் மீது அவரே பெட்ரோலை ஊற்றி தீ வைத்துள்ளார்.
இந்த சம்பவத்தில், அவரது மகளை காப்பாற்ற சென்ற தந்தை, நெருப்பில் சிக்கி படுகாயமடைந்தார். படுகாயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கடலூர் : மாவட்டம் சிதம்பரத்தில் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மடப்புரம் பகுதியில் தன்னுடைய குடும்பத்துடன் அர்ஜுனன் என்ற…
மத்தியப் பிரதேசம் : மாநிலத்தின் முதல்வர் கான்வாயில் இருந்த வாகனங்கள், ஜூன் 26, 2025 அன்று ரத்லம் மாவட்டத்தில் நடுவழியில்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமடைந்து அடுத்தகட்டமாக இந்த…
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டு நாட்டிற்கும் இடையே எழுந்த போரின் காரணமாக பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. அந்த பதற்றத்தை…
சென்னை : தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் தவறாமல் தண்ணீர் குடித்து உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவும் ‘வாட்டர் பெல்’ திட்டம்…
விழுப்புரம்: பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. இப்படியான…