40 ஆண்டுகளுக்கு பின் புதுச்சேரியில் பதவியேற்ற இரண்டாவது பெண் அமைச்சர்..!

Published by
Sharmi

40 ஆண்டுகளுக்கு பிறகு புதுச்சேரி அமைச்சரவையில் இரண்டாவது பெண் அமைச்சராக சந்திர பிரியங்கா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டணி வெற்றி பெற்றதை அடுத்து,மே 7 ஆம் தேதியன்று ரங்கசாமி அவர்கள் முதலமைச்சராக பதவியேற்றார்.

பின்னர்,புதுச்சேரி அமைச்சர்கள் தேர்வு செய்வதில் என்.ஆர்.காங்கிரசிற்கும், பாஜகவிற்கும் இடையே இழுபறி நீடித்தது.இதனையடுத்து,பாஜகவுக்கு சபாநாயகர் மற்றும் இரண்டு அமைச்சர் பதவியை விட்டுக்கொடுக்க முதல்வர் ரங்கசாமி ஒப்புக்கொண்டார்.இதனைத் தொடர்ந்து,அமைச்சரவைக்கான பெயர் பட்டியலை துணை ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன் அவர்களிடம் கொடுத்தார்.

இந்நிலையில்,இன்று புதுச்சேரி துணை ஆளுநர் தமிழிசை சௌந்தராஜன் அவர்கள் முன்னிலையில் அமைச்சர்கள் பதவியேற்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் என்.ஆர்.காங்கிரஸ் சார்பாக லட்சுமி நாராயணன், தேனீ ஜெயக்குமார்,சந்திர பிரியங்கா உட்பட மொத்தம் 5 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்றனர்.

முன்னதாக 1980 ஆம் ஆண்டில் ரேணுகா அப்பாதுரை காங்கிரஸ்-திமுக கூட்டணியில் கல்வி அமைச்சராக பணிபுரிந்தார்.இந்நிலையில் 40 ஆண்டுகளுக்கு பிறகு புதுச்சேரியில் சந்திர பிரியங்கா என்பவர் அமைச்சராக பதவி ஏற்றுள்ளார்.இவர் காரைக்கால் நெடுங்காடு தொகுதியில் வெற்றி பெற்றவர். மேலும், இவர் முன்னாள் அமைச்சர் சந்திரகாசுவின் மகளாவார்.

அமைச்சர் பதவியேற்ற பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சந்திர பிரியங்கா, 40 ஆண்டுகளுக்கு பிறகு பெண்ணுக்கு முக்கியத்துவம் அளித்து பதவி வழங்கியதற்காக முதலமைச்சருக்கு நன்றியை முதலில் தெரிவித்தார். பின்னர், அமைச்சராக பதவியேற்றத்தில் மகிழ்ச்சி என்றும், தனக்கு எத்துறை அளித்தாலும் அதில் சிறப்பாக பணியாற்றுவேன் என்றும் தெரிவித்துள்ளார்.

Published by
Sharmi

Recent Posts

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…

4 hours ago

”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!

வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…

5 hours ago

”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…

5 hours ago

”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!

சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…

6 hours ago

பாக். தாக்குதல்.. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் – உமர் அப்துல்லா அறிவிப்பு.!

காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…

6 hours ago

பாகிஸ்தான் தாக்குதல்., காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்!

காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…

8 hours ago