திருமணத்திற்கு சில நிமிடங்களுக்கு முன்பு மாப்பிள்ளை திருமண மண்டபத்தில் தற்கொலை..!

Published by
murugan

ஹைதராபாத்தில் உள்ள மலக்பேட் பகுதியை சார்ந்தவர் சந்தீப்(24) இவர் சாப்ட்வேர் என்ஜினீயராக ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.இவருக்கு இவரது உறவுக்கார பெண்க்கும் கடந்த சில நாள்களுக்கு முன் நிச்சயதார்த்தம் நடந்து உள்ளது.
இவர்களின் திருமணம் நேற்று காலை 11 மணிக்கு  நடைபெற இருந்தது.இவர்களின் திருமணம் ஹைதராபாத்தில் உள்ள ஒரு திருமணம் மண்டபத்தில் ஏற்பட்டு செய்யப்பட்டு இருந்தது.
நேற்று முன்தினம் சந்தீப் தனது உறவினர்களுடன் சந்தோசமாக பேசிக்கொண்டு இருந்த சந்தீப் அதிகாலை 3 மணி அளவில் தனது அறைக்கு சென்று தூங்க சென்று உள்ளார்.பின்னர் காலை 7 மணிக்கு சந்தீப் உறவினர்கள் சந்தீப் அறையின் கதவை தட்டி உள்ளனர்.
நீண்ட நேரமாக கதவை தட்டியும் சந்தீப் கதவை திறக்கவில்லை அதிக நேரம் தூங்காமல் இருந்ததால் சந்தீப் தூங்குகிறார் போல என நினைத்து சந்தீப்  உறவினர்கள் சென்று விட்டனர் . பின்னர் சிறிது நேரம் கழிந்து வந்து மீண்டும் அறையின் கதவை தட்டி உள்ளனர்.
சந்தீப் கதவை திறக்கவும் இல்லை , எந்தவித சத்தமும் கேட்கவில்லை இதனால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் கதவை உடைத்து உள்ளே சென்றனர்.அங்கு சந்தீப் தூக்கு மாட்டி கொண்டு இறந்த நிலையில் தொங்கி உள்ளார்.
இதை தொடர்ந்து போலீசாருக்கு உறவினர்கள் தகவல் கொடுத்தனர்.அங்கு வந்த போலீசார் சந்தீப் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.எதற்காக சந்தீப் தூக்கு மாட்டி கொண்டார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சந்தீப் தாய் சிறு வயத்திலே இறந்து விட்டார்.இவரது தந்தை ஒரு தொழிலதிபர் இதனால் சந்தீப்  தனது தாத்தா வீட்டில் வாழ்ந்து வந்து உள்ளார்.சந்தீப்  தனது தாத்தா மீது மிகுந்த பாசம் வைத்து இருந்ததாகவும் கூறப்படுகிறது. சந்தீப் தாத்தா சில மாதங்களுக்கு முன் இறந்து உள்ளார்.தாத்தா இறந்த பிறகு சந்தீப் சோகத்தில் இருந்ததாக கூறப்படுகிறது .தாத்தாவின் பிரிவை தாங்கமுடியாமல் சந்தீப் இறந்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

Published by
murugan

Recent Posts

”4 சுங்கச்சாவடிகள் வழியாக அரசு பேருந்துகளை அனுமதிக்க கூடாது” – உயர் நீதிமன்றம் உத்தரவு.!

”4 சுங்கச்சாவடிகள் வழியாக அரசு பேருந்துகளை அனுமதிக்க கூடாது” – உயர் நீதிமன்றம் உத்தரவு.!

சென்னை : தென் மாவட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள கப்பலூர், எட்டுர்வட்டம், சாலைப்புதூர் மற்றும் நாங்குநேரி ஆகிய 4 சுங்கச்…

10 hours ago

“கம்யூனிஸ்ட் கட்சிக்கு தமிழ்நாட்டில் முகவரி இல்லாமல் போய்விட்டது” – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்.!

சென்னை : கோவை மாவட்டத்தில் 2வது நாளாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்கிற…

11 hours ago

”ராமதாஸ் தலைமையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் செல்லாது” – அன்புமணி தலைமையில் தீர்மானம்.!

சென்னை : பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே நிலவும் உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் அன்புமணி…

11 hours ago

பண மோசடி வழக்கு: பிரபல மலையாள நடிகர் செளபின் சாஹிர் கைது.!

கொச்சி : பிரபல மலையாள நடிகர் சௌபின் சாகிர் நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மஞ்சுமல் பாய்ஸ் படத்தின்…

12 hours ago

3வது டெஸ்ட் போட்டி: தீவிர பயிற்சி மேற்கொள்ளும் இந்திய அணி..!

லண்டன் : இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான, 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, லண்டனில் நாளை மறுநாள் தொடங்க…

12 hours ago

ஆர்.சி.பி. வீரர் யாஷ் தயாள் மீது பாலியல் வழக்குப் பதிவு.!

உத்தரபிரதேசம் : காஜியாபாத்தைச் சேர்ந்த ஒரு பெண், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணியின் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் மீது,…

13 hours ago