Categories: இந்தியா

இந்த லிங்க்கை கிளிக் செய்யாதீங்க..! வாட்ஸ்அப் லிங்க் மோசடியில் ரூ.6.16 லட்சத்தை இழந்த நபர்..!

Published by
செந்தில்குமார்

வாட்ஸ்அப்பில் அனுப்பப்பட்ட லிங்க்கை கிளிக் செய்த நபர் ஒருவர் ரூ.6.16 லட்சத்தை இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலகளவில் பெரும்பாலான பயனர்களால் மெட்டாவின் சாட்டிங் செயலியான வாட்ஸ்அப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன்மூலம் மக்கள் செய்திகளை தங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் பரிமாறிக்கொள்கின்றனர். ஆனால் சிலர் மக்களிடம் இருந்து பணத்தை பறிப்பதற்கான மோசடி வேலைகளை செய்ய இதனை பயன்படுத்துகின்றனர்.

அந்தவகையில், நாக்பூரைச் சேர்ந்த 29 வயதான நபர் தனது வாட்ஸ்அப்பில் வந்த லிங்க்கை கிளிக் செய்ததால் ரூ.6.16 லட்சத்தை இழந்துள்ளார். ஒரு பெண் அவரை வாட்ஸ்அப்பில் தொடர்பு கொண்டதாக கூறப்படுகிறது. மேலும், ஒரு நிறுவனத்தைப் பற்றிய தகவல்ளை லிங்க் மூலம் அனுப்புவதாகவும், அதனை சரிபார்க்கும்படியும் கேட்டுள்ளார்.

அந்த இணைப்பை கிளிக் செய்தபோது, அவரது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.6.16 லட்சம் எடுக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்தது என்று அந்த நபர் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Published by
செந்தில்குமார்

Recent Posts

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…

5 hours ago

”மகன்களைக் கைவிட்ட ரவி மோகன்.., வீட்டை விட்டு வெளியேற்றுகிறார்” – கொந்தளித்த ஆர்த்தி.!

சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…

6 hours ago

”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!

டெல்லி :  ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

6 hours ago

” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!

டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

8 hours ago

300- 400 ட்ரோன்களை.., எல்லையில் நேற்று இரவு நடந்தது என்ன..? புட்டு..புட்டு.. வைத்த சோஃபியா குரேஷி.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…

8 hours ago

போர் பதற்றம் : மேகாலயாவில் 2 மாதம் இரவு நேர ஊரடங்கு உத்தரவு .!

மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…

8 hours ago