Accident [File Image]
தெலுங்கானா : ஆபத்தை உணராமல் தொலைபேசி பேசிக்கொண்டு சாலையை கடந்து செல்வது எவ்வளவு ஆபத்தானது என்பதை விவரிக்கும் வகையில், தெலுங்கானாவில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. மேட்சல்-போச்சரம் ஐடி காரிடாரி சாலையில் ஒருவர் போன் பேசிக்கொண்டே சாலையை கடக்க முயன்றபோது கார் மோதி ஏற்பட்ட விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
போனில் பேசிக் கொண்டிருந்த கிரி என்ற நபர் முதலில் சாலையில் சென்று கொண்டு இருந்த வாகனங்களை கவனித்து கொண்டு இருந்தார். வாகனங்கள் சென்ற பிறகு தொலைபேசியில் பேசிக்கொண்டே சாலையை கடக்க முயற்சி செய்தார். அப்போது சாலையில் ஓரத்தில் வந்த பிறகு அங்கிருந்த வந்த ஒரு கார் வேகத்தை குறைத்தது.
இருப்பினும், அந்த நபர் கவனம் இல்லாமல் தொலைபேசியில் பேசி கொண்டு இருந்தார் பின் கார் வேகமாக வந்த நிலையில், நபர் வேகமாக ஓடி சென்று சாலையை கடக்க முயற்சி செய்தார். அப்போது, அந்த கார் அவர் மீது மோதி இந்த சம்பவத்தில் தூக்கி எறியப்பட்ட அவர் 10 மீட்டர் தள்ளி விழுந்து உயிரிழந்தார்.
சாலையைக் கடக்கும்போது கார் மோதியதில், 10 மீட்டர் தூரம் காற்றில் தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்த சம்பவம் தொடர்பான வீடியோ அங்கு சாலையில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. நபர் மீது ஏற்றிய அந்த கார் முதலில் மெதுவாக ஓரமாக நிற்பது போல சென்றுகொண்டு இருந்தது. பிறகு அந்த பாதியில் ஆட்கள் கூடியவுடன் கார் வேகமாக சென்றது. இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…
கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…
சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…
நியூயார்க் : டிரம்ப் போப் ஃபிரான்சிஸ் மறைவை தொடர்ந்து, அடுத்த போப் யாராக இருக்கும் என கேட்கப்பட்ட கேள்விக்கு, "நானே போபாக…