beer alcohol [file image]
ஹைதராபாத் : கையில் பீர் பாட்டிலுடன் ஹைதராபாத்தில் பெண் ஒருவர் ரகளையில் ஈடுபட்ட நிலையில், காவல்துறையினர் இது பற்றி விசாரணை செய்து வருகிறார்கள்.
ஹைதராபாத் மாநிலத்தில் எல்.பி.நகர்-நாகோல் சாலையில் மதுபோதையில் இருந்த ஒரு ஆணும் பெண்ணும் சாலையில் பொது இடத்தில் பீர் பாட்டிலுடன் மதுகுடித்துக்கொண்டும், சிகரெட் பிடித்துக்கொண்டும் இருந்தனர். இதனை அந்த சாலையில், நடைப்பயிற்சி வந்தவர்கள் பார்த்ததும் பொது இடத்தில் என் இது போன்று செய்கிறீர்கள் என்று கேட்டனர்.
உடனடியாக அந்த பெண் அப்படி சொன்னவர்களிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். ஒரு சிலர் அந்த பெண் பீர் குடிப்பதை வீடியோவும் எடுத்தார்கள். இதனை பார்த்த அந்த பெண் எதற்காக என்னை வீடியோ எடுக்கிறீர்கள் என்று கேட்க வீடியோ எடுப்பவர்களுக்கு பதிலுக்கு வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். பிறகு அந்த பெண் வீடியோ எடுப்பதை நிறுத்துங்கள் என்று கூறி போனையும் பிடிங்க முயற்சி செய்தார்.
இதனை பார்த்த அங்கிருந்த பெயர்வர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து போது இடத்தில் இப்படியான மோசமான செயல்களில் ஈடுபடவேண்டாம். எல்லாரும் வந்து போகும் இடத்தில் இப்படியா செய்வீர்கள் ? என்று கூறினார்கள். ஆனால், அந்த பெண் கோபத்துடன் பெயர்வர்களுடனுமே வாக்கு வாதத்தில் ஈடுபட்டார்.
ஒரு கட்டத்திற்கு மேல் வாக்கு வாதம் அதிகமான நிலையில், அந்த பெண்ணை முதலில் இந்த இடத்தில் நிற்காமல் வீட்டுக்கு செல்லுங்கள் என அங்கிருந்த பெரியவர்கள் காட்டத்துடன் கத்தினார்கள். பின் அந்த பெண்ணுடன் வந்த ஆண் அவரை சமாதானம் செய்து காரில் ஏறி அழைத்து சென்றார். இதுவரை எந்த வழக்கும் பதிவு செய்யப்படாத நிலையில், வெள்ளிக்கிழமை நாகோல்-எல்பி நகரில் இருந்து வீடியோ வைரலாக பரவியதையடுத்து போலீசார் இதுகுறித்து விசாரித்து வருகின்றனர்.
ஈரான் : ஈரான் - இஸ்ரேல் இடையே அதிகரிக்கும் போர் பதற்றம் காரணமாக, பாதுகாப்பு கருதி ஈரான் தலைநகர் தெஹ்ரானில்…
அமெரிக்கா : இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே நடந்து வரும் போரில் அமெரிக்கா விரைவில் ஈடுபடக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க ஊடக…
சென்னை : தமிழ்நாடு முழுவதும் ஜூலை 9ம் தேதி அன்று டாஸ்மாக் ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாக தமிழ்நாடு டாஸ்மாக்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் சார்பில், கீழடி அகழ்வாராய்ச்சி குறித்து பாஜகவை கடுமையாக விமர்சித்து, "கீழடி ஆய்வு முடிவுகள்…
சென்னை : நடிகர் அஜித் குமார், சினிமாவை தாண்டி மோட்டார் ஸ்போர்ட்ஸ் உலகிலும் தனக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளார்.…
சென்னை : தமிழ்நாடு டாஸ்மாக்கில் நடந்ததாகக் கூறப்படும் ரூ.1000 கோடி முறைகேடு வழக்கில், திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும்…