டெல்லி வன்முறை வழக்கில் கைதான நடிகர் தீப் சித்துவுக்கு 7 நாள் போலீஸ் காவல்.!

டெல்லி குடியரசு தின வன்முறை வழக்கில் கைதான நடிகர் தீப் சித்துவுக்கு 7 நாள் போலீஸ் காவல் – டெல்லி நீதிமன்றம் உத்தரவு.
டெல்லியில் குடியரசு தினத்தன்று விவசாயிகளின் டிராக்டர் பேரணியின் போது நடந்த வன்முறை தொடர்பாக தலைமறைவாக இருந்த பஞ்சாப் நடிகர் தீப் சித்துவை காவல்துறை இன்று கைது செய்தது. இந்நிலையில், வன்முறை வழக்கில் கைதான பஞ்சாப் நடிகர் தீப் சித்துவுக்கு 7 நாள் போலீஸ் காவல் என்று டெல்லி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதனிடையே, தீப் சித்து மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது டெல்லி காவல்துறை பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து நடிகர் தீப் சித்து தலைமறைவானதை அடுத்து, அவரது குறித்து தகவல் அளித்தால் ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று கைதானார் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
இஸ்ரேலில் குடியிருப்புகளில் குண்டு மழை பொழியும் ஈரான்.! கிளஸ்டர் குண்டுகள் என்ன செய்யும்.?
June 20, 2025
தனுஷின் ‘குபேரா’ எப்படி இருக்கு.? நெட்டிசன்கள் என்ன சொல்கிறார்கள்.! இதோ டிவிட்டர் விமர்சனம்.!
June 20, 2025
”பட்டாசு விபத்தில் பலியானவர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்” – மதுரை கிளை உத்தரவு.!
June 20, 2025