ஆசியாவின் 2-வது பணக்காரர் என்ற அந்தஸ்தை இழந்த அதானி…! 3 நாளில் ரூ.66,681 கோடி இழப்பு..!

Published by
லீனா

3 நாட்களில் மட்டும் கௌதம் அதானி 9 பில்லியன் டாலர் சொத்து மதிப்பை இழந்துள்ளார்.

அதானி குழுமத்தின் தலைவரான கவுதம் அதானியின் மொத்த சொத்து மதிப்பு 77 பில்லியன் டாலராக உயர்ந்ததையடுத்து, இவர் இந்தியாவிலும், ஆசியாவிலும்  இரண்டாவது பணக்காரர் என்ற இடத்தை பிடித்தார். மேலும் உலகளாவிய பணக்காரர் பட்டியலில் 14-வது இடத்தில் இருந்தார்.

இந்நிலையில் கவுதம் அதானியின் நிறுவனப் பங்குகளில் அதிக முதலீடு செய்திருக்கும் மூன்று வெளிநாட்டு முதலீட்டாளர்களின் கணக்குகளை NSDL எனப்படும் தேசிய பங்குகள் வைப்பு நிறுவனம் முடக்கியதாக செய்திகள் வெளியானது. இந்த செய்தி வெளியானதிலிருந்து, அதானி குழும பங்குகள் தொடர்ந்து சரிந்து வருகிறது. இதனால் இவரது நிறுவன பங்குகளின் விலை குறைந்துள்ளது மட்டுமல்லாமல், அதானியின் சொத்து மதிப்பும் சரிந்துள்ளது.

கடந்த 3 நாட்களில் மட்டும் கௌதம் அதானி 9 பில்லியன் டாலர் சொத்து மதிப்பை இழந்துள்ளார். இதனால் இவரது சொத்து மதிப்பு 63. 5 பில்லியன் டாலர் வரை வீழ்ச்சி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தியாவின் முதல் பணக்காரரான முகேஷ் அம்பானிக்கும், கௌதம் அதானிக்கும் இடையே குறைவான இடைவெளி தான் இருந்தது.

ஆனால் தற்போது அதானியின் சொத்து மதிப்பு சரிந்துள்ளதையடுத்து, இருவருக்கும் இடையேயான இடைவெளி அதிகரித்து உள்ளது. மேலும் இவர் ஆசியாவின் இரண்டாவது பெரிய பணக்காரர் என்ற அந்தஸ்தையும் இழந்துள்ளார். மேலும், சர்வதேச அளவில் இவர் 15-ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். தற்போது, அதானியின் இரண்டாவது இடத்தை சீன தொழிலதிபர் ஷுங் ஷன்ஷன் மீண்டும் பிடித்துள்ளார்.

Published by
லீனா
Tags: adhaniloss

Recent Posts

சாலை விபத்தில் காயம் ஏற்பட்டால் இலவச சிகிச்சை! மத்திய அரசு அறிவிப்பு!

சாலை விபத்தில் காயம் ஏற்பட்டால் இலவச சிகிச்சை! மத்திய அரசு அறிவிப்பு!

டெல்லி : சாலை விபத்தில் காயமடைபோவருக்கு இனி இலவச சிகிச்சை வழங்ப்படும் என மத்திய அரசு தரப்பில் தற்போது தகவல்…

25 minutes ago

பாஜக பெண் நிர்வாகி தலை துண்டித்து கொலை! 3 பேர் மதுரை நீதிமன்றத்தில் சரண்!

மதுரை : தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உதயசூரியபுரம் எனும் ஊரில் நேற்று இரவு பெண் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு…

1 hour ago

சந்தர்ப்பவாதிகளாலும், துரோகிகளாலும் திமுகவை வீழ்த்த முடியாது! மு.க.ஸ்டாலின் கடிதம்!

சென்னை : தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைத்து நாளையோடு (மே 7) 4 ஆண்டுகள் நிறைவுற்று…

2 hours ago

பாகிஸ்தானுக்கு சிந்து நதி தண்ணீர் நிறுத்தம்? புதிதாக 6 அணைகள் கட்ட அரசு திட்டம்!

டெல்லி : ஏப்ரல் 22 காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்ற நடவடிக்கைகள்…

3 hours ago

Live : சென்னை ED ரெய்டு முதல்.. இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் வரை…

சென்னை : சென்னையில் இன்று காலை முதலே கோயம்பேடு,  தி நகர், அசோக் நகர், சாலிகிராமம், விருகம்பாக்கம் ஆகிய பல்வேறு…

5 hours ago

வான்வெளி தாக்குதல்., சைரன் ஒலி., பதுங்கு குழிகள்! நாளை நாடு முழுவதும் போர்க்கால ஒத்திகை!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு…

5 hours ago