Categories: இந்தியா

ஜெய் பாலஸ்தீனம்.! பாராளுமன்றத்தை அதிரவைத்த ஹைதராபாத் எம்.பி ஒவைசி.!

Published by
மணிகண்டன்

டெல்லி: 18வது மக்களவை முதல் கூட்டத்தொடர் புதிய பாராளுமன்றத்தில் நடைபெற்று வருகிறது. நேற்றும் இன்றும் புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்பிக்கள் பதவியேற்று வருகின்றனர் . நேற்று பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள், ஆளும்கட்சி எம்பிக்கள் பதவி ஏற்ற நிலையில், இன்று ராகுல் காந்தி , தமிழக எம்பிக்கள் என பலர் பதவி ஏற்றுக்கொண்டனர்.

அப்போது தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் மக்களவை தொகுதி எம்பி, AIMIM கட்சி தலைவர் அசாதுதீன் ஒவைசி இன்று பதவி ஏற்றுக்கொண்டார். அப்போது, அவர் உருது மொழியில் உறுதி மொழி ஏற்றுக்கொண்டார்.

பின்னர் அவர் இறுதியில், ஜெய் பீம், ஜெய் தெலுங்கானா, தக்பீர் அல்லாஹு அக்பர் என்ற கூறிக்கொண்டே ஜெய் பாலஸ்தீனம் என முழக்கமிட்டார். அந்த சமயம் பாஜக எம்பிக்கள் சிலர் “ஜெய் ஸ்ரீராம்” என்று பதில் கோஷம் எழுப்பியதால் மக்களவையில் சிறுது சலசலப்பு நிலவியது.

இஸ்ரேல் – ஹமாஸ் போரானது கடந்த  2023 அக்டோபர் முதல் தொடங்கி தற்போது வரையில் பாலஸ்தீன நாட்டின் காசா நகரில் இன்னும் சில இடங்களில் தொடர்ந்து வருகிறது. இதில், இஸ்ரேலுக்கு ஆதரவாக ஒரு தரப்பினரும், பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக ஒரு தரப்பினரும் தங்கள் கருத்துக்களை பல்வேறு வகைகளில் பதிவிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
மணிகண்டன்

Recent Posts

அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!

டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் ​​மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…

15 hours ago

விராட் கோலி ஓய்வு: ‘அந்தக் கண்ணீரை நான் நினைவில் கொள்வேன்’ – அனுஷ்கா சர்மாவின் உருக்கமான பதிவு.!

மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…

16 hours ago

மே 30 இறுதிப்போட்டி? மீண்டும் ஐபிஎல்லை தொடங்க திட்டம் போட்ட பிசிசிஐ!

டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…

17 hours ago

5 நாள் பயணமாக உதகை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…

17 hours ago

”நெருங்கவே முடியாது.., அனைத்து ராணுவ பிரிவுகளும் தயார் நிலையில் உள்ளன” – துணை அட்மிரல் ஏ.என். பிரமோத்.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் நிறுத்தத்திற்குப் பிறகு, இந்திய ராணுவத்தின் மூன்று பிரிவுகளின் இயக்குநர் ஜெனரல் நிலை…

18 hours ago

“எங்களின் இலக்கு பயங்கரவாதிகள் தான்” இந்திய ஏர் மார்ஷல் பார்தி பேச்சு!

டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…

18 hours ago