Categories: இந்தியா

வேளாண் துறைக்கு ரூ.1.52 லட்சம் கோடி ஒதுக்கீடு..! நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு ..!

Published by
அகில் R

மத்திய பட்ஜெட் 2024 : நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நடப்பு நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

2024-25 நிதியாண்டுக்கான முழு பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (ஜூலை 23) மக்களவையில் தாக்கல் செய்தார். இதன்மூலம் தொடர்ந்து 7வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்த முதல் நபர் என்ற பெருமையை நிர்மலா சீதாராமன் பெற்றுள்ளார்.

இந்த பட்ஜெட் தாக்கலில் உரையாற்றி வந்த நிர்மலா சீதாராமன் பல முக்கிய அறிவிப்புகளை வெளியீட்டு வந்தார். கடந்த நிதியாண்டில் ரூ.1.26 கோடி வேளாண் துறைக்கு அறிவித்த நிலையில், நடப்பு நிதியாண்டில் முக்கிய அறிவிப்பாக வேளாண் துறைக்கு ரூ.1.52 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டில் தெரிவித்திருந்தார்.

இந்த நிதியாண்டில் 2024-25 பட்ஜெட்டில் 0.27 % சதவிகிதம் அதிகரித்து ரூ.1.52 லட்சம் கோடி அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வரும் அடுத்த 2 ஆண்டுகளில் இயற்கை விவசாயம் செய்வதற்கு ரூ.1 கோடி விவசாயிகளுக்கு பயிற்சியளிக்கப்படவுள்ளது. அதே போல வேளாண் துறையில் டிஜிட்டல் மயமாகபுகுத்தப்படும் எனவும் டிஜிட்டல் முறையில் வேளான் பொருட்கள் தொடர்பான சர்வே எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல பருவநிலை மாற்றத்தால் எந்த பாதிக்கப்படாத வகையில் 152 வகை பயிர்களை நாடு முழுவதும் அறிமுகம் செய்யப்படும் எனவும் பிரதமரின் இலவச உணவு வழங்கும் கரீப் கல்யாண் திட்டம் இன்னும் 5 ஆண்டுக்கு நீடிக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அது மட்டுமின்றி ‘கிசான் கிரெடிட் கார்டுகள்’ வழங்கும் திட்டத்தை மேற்கொண்டு 5 மாநிலங்களில் அமல்படுத்த உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Recent Posts

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

11 hours ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

14 hours ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

17 hours ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

18 hours ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

20 hours ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

20 hours ago