Categories: இந்தியா

தலையில் பேன்டேஜ் உடன் வேட்புமனு தாக்கல் செய்தார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி.!

Published by
மணிகண்டன்

Andhra Pradesh Election : ஆந்திர மாநிலம் புலிவெந்துலா தொகுதியில் அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி வேட்புமனுத்தாக்கல் செய்தார்.

ஆந்திர பிரதேசத்தில் உள்ள 25 மக்களவை தொகுதிகள் மற்றும் 175 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நாடாளுமன்ற நான்காம் கட்ட தேர்தல் தேதி மே 13ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஆளும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி தனித்தும், எதிர்க்கட்சியான தெலுங்கு தேசம் கட்சி , பாஜக மற்றும் ஜனசேனா உடன் கூட்டணி அமைத்து களமிறங்குகின்றன.

இந்த தேர்தலுக்குக்கான வேட்புமனு தாக்கல் கடந்த ஏப்ரல் மாதம் 18ஆம் தேதி முதல் தொடங்கியது. முன்னதாக தெலுங்கு தேசம் கட்சி சார்பாக போட்டியிடும் நடிகர் பாலகிருஷ்ணா இந்துப்பூர் தொகுதியிலும், ஜனசேனா கட்சி தலைவர் பவன் கல்யாண் பிதாவரம் தொகுதியிலும் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தனர். அதே போல மற்ற சில முக்கிய ஆந்திர அரசியல் தலைவர்களும் தாங்கள் போட்டியிடும் தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

இந்நிலையில், இன்று புலிவெந்துலா சட்டமன்ற தொகுதியில் ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி, இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அப்போது அவர் தலையில் முன்னதாக அடிபட்டு இருந்த காயத்திற்காக பேண்டேஜ் ஒட்டி இருந்தார்.

கடந்த ஏப்ரல் 13ஆம் தேதி விஜயவாடாவில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி மீது தூரத்தில் இருந்த ஒருவர் திடீரென கல் வீசியதால் கண்ணிற்கு மேலே சிறிய காயம் ஏற்பட்டது. உடனடியாக அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதற்கான பேண்டேஜை தான் இன்றும் தலையில் ஒட்டி இருந்தார் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி.

 

Published by
மணிகண்டன்

Recent Posts

அடுத்தடுத்து கோளாறாகும் ஏர் இந்தியா விமானங்கள்? பதற்றத்தில் பயணிகள்!

கொல்கத்தா : ஏர் இந்தியா விமானங்களில் அடுத்தடுத்து தொழில்நுட்பக் கோளாறுகள் கண்டறியப்பட்டு வருவதால் பயணிகள் மிகவும் அதிர்ச்சியடைந்து இனிமேல் விமானத்தில்…

13 minutes ago

டெஹ்ரானில் இருந்து உடனடியாக அனைவரும் வெளியேறுங்கள்! அலர்ட் கொடுத்த டொனால்ட் டிரம்ப்!

இஸ்ரேல் : ஈரான் தலைநகர் டெஹ்ரான் மீது இஸ்ரேல் தொடர் வான்வழி தாக்குதல்கள் நடத்தி வரும் நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட்…

45 minutes ago

இன்று இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! அலர்ட் கொடுத்த வானிலை மையம்!

சென்னை : வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக…

1 hour ago

ஈரான் அரசு தொலைக்காட்சி அலுவலகத்தை நொறுக்கிய இஸ்ரேல்.! தாக்குதலின் நேரடியாக ஒளிபரப்பு காட்சி..,

இஸ்ரேல் : ஈரானின் தலைநகர் தெஹ்ரான் மீது இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. அதன் ஒரு பகுதியாக ஈரானின் அரசு…

10 hours ago

மதிமுக அலுவலகத்தில் அடையாளம் தெரியாத நபர் கல் வீச்சு தாக்கியதால் பரபரப்பு.!

சென்னை : சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகத்தின் மீது, இன்று அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தாக்குதல்…

10 hours ago

மேடையில் திடீரென ஒலித்த BEEP சப்தம்.., உரையை முடிக்கச் சொல்லி அலாரமா? – ஜெகதீப் தன்கர் கலகல…,

புதுச்சேரி : குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் 3 நாள் பயணமாக நேற்றைய தினம் புதுச்சேரி சென்றார். இன்று…

10 hours ago