கொரோனா வைரஸ் தடுப்பதற்கான மற்றொரு புதிய தடுப்பூசி ஹைதராபாத் “பயாலாஜிக்கல் இ ” நிறுவனம் உருவாக்கி வருகிறது.
நாடு முழுவதும் கொரோனா தொற்றின் 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. பல மாநிலங்களிலும் தினமும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதற்கிடையில், “பயாலாஜிக்கல் இ ” என்ற நிறுவனம் உருவாக்கியுள்ள புதிய தடுப்பூசியின் முதல் மற்றும் இரண்டாம் கட்ட பரிசோதனைகள் முடிந்து விட்டன. “பயாலாஜிக்கல் இ ” நிறுவனத்தின் புதிய தடுப்பூசியின் மூன்றாம் கட்ட பரிசோதனை விரைவில் தொடங்கவுள்ளது. மூன்றாம் கட்ட பரிசோதனை முடிவுகள் கிடைத்தவுடன் பொதுமக்கள் அதை போட்டுக்கொள்வதற்க்கான அனுமதியை அரசு அளிக்கும்.
ஆகஸ்ட் மாதத்தில் “பயாலாஜிக்கல் இ ” நிறுவனம் தயாரித்து வரும் தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. முழுக்க முழுக்க இந்திய ஆராய்ச்சி மூலம் உருவாக்கப்பட்ட தடுப்பூசியாக “பயாலாஜிக்கல் இ ” நிறுவனம் தயாரிப்பு இருக்கும். பிரிட்டனின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் கண்டுபிடித்த கோவிஷில்டு, பாரத் பயோடெக்கின் கோவாக்சின் தடுப்பூசிகள் தற்போது இந்தியாவில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
ரஷ்ய உருவாக்கியுள்ள ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை இறக்குமதி செய்யவும், பயன்படுத்தவும் மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. “பயாலாஜிக்கல் இ ” நிறுவனம் உருவாக்கியுள்ள தடுப்பூசிக்கு அனுமதி கிடைத்தால் இந்தியாவில் இது 4-வது தடுப்பூசியாக இருக்கும். மத்திய அரசு அனுமதி கிடைத்தவுடன் வாரத்துக்கு ஏழு கோடி தடுப்பூசியை தங்கள் நிறுவனம் தயாரிக்கும் என பயாலாஜிக்கல் இ நிறுவனம் தெரிவித்துள்ளது.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…