பொட்டு வைத்து தேங்காய் உடைக்கப்பட்டு பூஜையுடன் வரவேற்கப்பட்ட அப்பாச்சி ரக போர் விமானங்கள்!

Published by
மணிகண்டன்

இந்திய விமானப்படையில் தற்போது புதியதாக அப்பாச்சி AH 64a ரக போர் விமானங்கள் மொத்தம் 8 போர் விமானங்கள் வாங்கப்பட்டுள்ளன. இந்த விமானங்களை அமெரிக்காவை சேர்ந்த போயிங் என்கிற நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்த போர் விமானத்தில் இருவர் பயணிக்கும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில், ஒருவர் விமானத்தினை இயக்க, இன்னொருவர் ஆயுதங்களை கையாளும்படி அமைக்கப்பட்டுள்ளது. இந்த ரக விமானத்தை உபயோகப்படுத்த விமானப்படை வீரர்களுக்கு இரண்டு ஆண்டுகள் பயிற்சி நடைபெற்று பின்னர் இந்த விமானங்களை இயக்க அனுமதிக்கப்படுவர்.

இந்த போர் விமானத்தில் தொடர்ச்சியாக 1200 குண்டுகளை வெளியிட்டு தாக்குதல் நடத்த முடியும். இதன் சக்கரங்களின் கிழேயும் குண்டு செலுத்தும் கருவி பொருத்தப்பட்டுள்ளது. இருளிலும் இலக்கை சரியாக கணிக்கும் வகையில் தொலைநோக்கிகள் இதில் பொருத்தப்பட்டுள்ள்ளன.

இந்த வகை விமானங்களை அமெரிக்க, கிரீஸ், பிரிட்டன், அரபு நாடுகள், சிங்கப்பூர் என இன்னும் சில நாடுகள் இந்த ரக போர் விமானங்களை வைத்துள்ளன. தற்போது இந்த ரக விமானங்களை இந்தியாவும் வாங்கியுள்ளது.

இந்த விமானங்களுக்கு பஞ்சாப் பதன்கோட்டில் இன்று இந்திய ராணுவத்தில் பலத்த வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்பச்சி விமானங்களுக்கு பொட்டு வைக்கப்பட்டு, தேங்காய் உடைத்து கும்பிட்டு பூஜைகள் நடத்தப்பட்டன.

Published by
மணிகண்டன்

Recent Posts

பஹல்காம் தாக்குதல்: பொதுமக்களிடம் இதெல்லாம் உள்ளதா.? என்ஐஏ வேண்டுகோள்.!

டெல்லி : ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22, 2025 அன்று நடந்த பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக தகவல்…

36 seconds ago

IND Vs PAK.. போர் பதற்றம்.., ஐபிஎல் தொடர் கைவிடப்படுகிறதா..? பிசிசிஐ விளக்கம்!

டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா பழிவாங்கியுள்ளது. மே 7 ஆம் தேதி நள்ளிரவு சுமார் 1.30 மணியளவில்,…

40 minutes ago

சென்னையில் போர் பாதுகாப்பு ஒத்திகை.! ‘அச்சம் வேண்டாம்’ – பேரிடர் மேலாண்மை ஆணையம்.!

சென்னை : மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி, சில முக்கிய நிறுவல்களில் சிவில் பாதுகாப்பு பயிற்சி மற்றும் ஒத்திகையை ஏற்பாடு…

1 hour ago

ஆபரேஷன் சிந்தூர்: வீர உரையாற்றிய இந்த சிங்கப்பெண்கள் யார்.? சிலிர்க்கும் பின்னணி..!!

டெல்லி : பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இன்று (மே 07) இலக்குகளைக் குறிவைத்து ராணுவ தாக்குதல்களை மேற்கொண்டுள்ளோம்" என்று…

2 hours ago

ஆபரேஷன் சிந்தூர் என்றால் என்ன? நள்ளிரவு பயங்கரவாதிகளின் தூக்கம் துளைத்த தரமான சம்பவம்.!

காஷ்மீர் : 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலுள்ள பயங்கரவாத முகாம்களை துல்லியமாக தாக்கியது. மே 7,…

3 hours ago

10 மாநில முதலமைச்சர்களுடன் அமித் ஷா அவசர ஆலோசனை.!

டெல்லி : சிந்தூர் ஆபரேஷனை தொடர்ந்து இந்தியாவின் எல்லையோர மாநிலங்களில் பதற்றம் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், எல்லையோரங்களை சேர்ந்த…

4 hours ago