வழியெங்கும் கலை நிகழ்ச்சி.! அதிபர் வருகையை முன்னிட்டு 2 லட்சம் பேர் வரவேற்பு.!

Published by
பாலா கலியமூர்த்தி
  • அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தியா வருகையை முன்னிட்டு அகமதாபாத்தில் அவர் வரும் வழியெங்கும் கலைநிகழ்ச்சிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்.

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மற்றும் அவரது மனைவி மெலனியாவுடன் வரும் 24-ம் தேதி 2 நாள் பயணமாக இந்தியா வருகிறார்கள். குஜராத் மாநிலம், அகமதாபாத் விமான நிலையத்துக்கு வரும் அவரை, பிரதமர் மோடி வரவேற்கிறார். இங்கிருந்து இரு தலைவர்களும் சபர்மதி ஆசிரமம் செல்கின்றனர். பிறகு மோட்டேரா பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள சர்தார் வல்லபாய் படேல் என்ற கிரிக்கெட் ஸ்டேடியதுக்கு செல்கின்றனர். அங்கு பிரதமர் மோடி நமஸ்தே ட்ரம்ப் என்ற தலைப்பில் வரவேற்பு அளிக்கிறார். இந்நிலையில், ட்ரம்ப் பங்கேற்கும் அந்நிகழ்ச்சியில் சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கலந்துகொள்வார்கள் என தகவல் வந்துள்ளது.

அதுமட்டுமில்லாமல் இந்த நிகழ்ச்சிகள் தொடர்பாக ட்ரம்ப் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அகமதாபாத்தில் தன்னை 70 லட்சம் பேர் திரண்டு வரவேற்கவுள்ளதாக உற்சாகமாக கூறினார். அகமதாபாத் மொத்த மக்கள் தொகையே 80 லட்சம் பேர் என்பதால் 70 லட்சம் பேர் எப்படி வரவேற்க முடியும் என்ற கேள்வி எழுந்தது. இதையடுத்து அகமதாபாத் மாநகராட்சி ஆணையர் விஜய் நெஹ்ரா கூறுகையில், அகமதாபாத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் 22 கி.மீ. சாலை வழிப் பயணத்தில் வழிநெடுகிலும் மக்கள் வரவேற்பு அளிக்கின்றனர். இதற்காக ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் வருவது உறுதியாகி உள்ளது. இந்திய கலாச்சாரத்தை காட்டுவதற்கு மிகப்பெரிய வாய்ப்பு கிடைத்துள்ளது என அவரது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

மேலும் ட்ரம்ப் வருகை தொடர்பாக குஜராத் முதல் மந்திரி விஜய் ரூபானி, காந்தி நகரில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடத்தினார். அதில் ட்ரம்ப் வருகையை முன்னிட்டு பல்வேறு பாதுகாப்பு  நடவடிக்கை மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகள் குறித்து தெரிவித்தார். பின்னர் வழியெங்கும் ட்ரம்ப் செல்கிற பாதையில் மேடைகள் அமைத்து கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும். பின்னர் அவரை வரவேற்க 2 லட்சம் பேர் வருவார்களா என அவர் தெரிவித்தார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

15 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

17 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

17 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

18 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

20 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

21 hours ago