நிர்பயா வழக்கு… கொல்லப்பட்ட குற்றவாளிகள்… ஆஷா தேவியின் சட்ட தொடர்ந்த போராட்டம்… இறுதியாக பேட்டியளித்த ஆஷா தேவி…

Published by
Kaliraj

மருத்துவ மாணவி நிர்பயா பலாத்காரம் செய்யப்பட்டு  படுகொலை செய்யப்பட்ட போது ஒட்டுமொத்த தேசமே அதிர்ச்சியில்  உறைந்தது இருந்தது.  அப்போதே மக்கள் கூட்டம் டெல்லியை உலுக்கி பிரமாண்ட தன்னெழுச்சி பேரணியை பொதுமக்கள் தொடங்கினர். அன்று தொடங்கியது நிர்பயாவின்  தாயார் ஆஷாதேவியின் பயணம். இவர்,  பலாத்கார குற்றவாளிகளுக்கு மரண தண்டனையே தீர்வு. எப்போதுதான் இந்த கயவர்களை தூக்கிலிடுவீர்கள்? என கண்ணீரும் கம்பலையுமாக கதறினார். நிர்பயா பலாத்கார வழக்கில் ஏற்கனவே 3 முறை குற்றவாளிகளைத் தூக்கிலிட தேதி குறிப்பிடப்பட்டது. ஆனால் இந்திய அரசியலமைப்பில் எத்தனை  வாய்ப்புகள் இருக்கிறதோ அத்தனையையும் நிர்பயாவின் குற்றவாளிகள் பயன்படுத்தினர்.

 

Image result for ஆஷா தேவி

அப்போதெல்லாம் மனச்சோர்வையும் குமுறலையும் கொட்டி கொட்டி அழுதவர் ஆஷாதேவி.  4-வது முறையாகவும் குற்றவாளிகளை தூக்கிலிடுவதற்கான  நாள் வெள்ளிக்கிழமை மார்ச் 20-ந் தேதி அதிகாலை 5.30 மணி என நாள் குறிக்கப்பட்டது. முந்தைய வியாழன் இரவு தொடங்கி அதிகாலை வரை நீதியின் கதவுகளை மீண்டும் நிர்பயா குற்றவாளிகள் தட்ட தொடங்கினர். அந்த நள்ளிரவிலும் நீதிமன்றங்களுக்கு ஓடோடி வந்தார் ஆஷாதேவி. டெல்லி உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் என அனைத்துக்கும் ஓடி ஓடி குற்றவாளிகளின் திட்டத்தை களைத்தார் ஆஷாதேவி.
உச்சநீதிமன்றமும் தூக்கு தண்டனை கைதிகளின் மனுவை தள்ளுபடி செய்த நிலையில் ஆனந்தத்தை வெளிப்படுத்திய ஆஷாதேவி தம்மை பேட்டி எடுத்த பெண் நிருபரை வாரி அணைத்து முத்தம் கொடுத்து  தனது மகிழ்ச்சியை  வெளிப்படுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நிர்பயாவின் தாயார்  ஆஷா தேவி , எனது நாடு எனக்கு நீதியை பெற்றுத் தந்துள்ளது. எனது மகளுக்கு மட்டுமல்ல நாடு முழுவதும் உள்ள பெண்களுக்கு நீதி கிடைத்து விட்டது என கண்ணீர் மல்க தெரிவித்தார்.மேலும் அவர், இந்திய நீதித்துறைக்கும், இந்திய அரசுக்கும் தனது நெஞ்சார்ந்த நன்றியையும் தெரிவித்துள்ளார்,

Published by
Kaliraj

Recent Posts

பையன் ஹீரோ ஆகிட்டான் ரொம்ப பயமா இருக்கு! விஜய் சேதுபதி பேச்சு!

சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி, ‘பீனிக்ஸ்’ திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஏற்கனவே, இந்த…

10 hours ago

ஹர்திக் மட்டும் இல்லனா கோப்பை வந்திருக்காது! கேப்டன் ரோஹித் சர்மா ஓபன் டாக்!

டெல்லி : 2024 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றது இன்னும் ஒரு மறக்க முடியாத…

11 hours ago

சிதம்பரம் அருகே கொடூரம்…காதல் விவகாரத்தில் மகளையே கொன்ற தந்தை!

கடலூர் : மாவட்டம் சிதம்பரத்தில் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மடப்புரம் பகுதியில் தன்னுடைய குடும்பத்துடன் அர்ஜுனன் என்ற…

12 hours ago

தண்ணீர் கலந்த டீசல்…நடுவழியில் நின்ற ம.பி. முதல்வர் கான்வாய் வாகனங்கள்!

மத்தியப் பிரதேசம் : மாநிலத்தின் முதல்வர் கான்வாயில் இருந்த வாகனங்கள், ஜூன் 26, 2025 அன்று ரத்லம் மாவட்டத்தில் நடுவழியில்…

12 hours ago

யாருடனும் தொடர்பு இல்லை ப்ளீஸ் கொடுங்க..ஜாமீன் கேட்கும் நடிகர் கிருஷ்ணா!

சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமடைந்து அடுத்தகட்டமாக இந்த…

13 hours ago

இஸ்ரேல் போட்ட ஸ்கெட்சில் இருந்து ஈரான் தலைவர் காமெனி தப்பியது எப்படி? வெளியான சீக்ரெட்!

ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டு நாட்டிற்கும் இடையே எழுந்த போரின் காரணமாக பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. அந்த பதற்றத்தை…

14 hours ago