ஆன்லைன் வகுப்புகளை நடத்த அங்கீகாரம் பெற அக்டோபர் 15 வரை விண்ணப்பிக்கலாம் என்று பல்கலைக்கழக மானியக் குழு தெரிவித்துள்ளது.
தொலைதூரக் கல்வி வகுப்புகள் மற்றும் ஆன்லைன் வகுப்புகளை உயர் கல்வி நிறுவனங்கள் தொடங்குவது குறித்து கடந்த 4-ம் தேதி யுஜிசி சார்பில் அறிவிப்பு வெளியானது. அதன்படி, ஜனவரி 2021-ம் ஆண்டுக்கான படிப்புகளை உயர் கல்வி நிறுவனங்கள் தொடங்கலாம். ஆனால், முன்னதாக பல்கலைக்கழக மானியக் குழுவிடம் (யுஜிசி) இருந்து அங்கீகாரம் பெற வேண்டியது அவசியம் என்று கூறியுள்ளது.
இந்நிலையில், ஆன்லைன் வகுப்புகளை நடத்த அங்கீகாரம் பெற அக்டோபர் 15 வரை விண்ணப்பிக்கலாம் என்று பல்கலைக்கழக மானியக் குழு தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், 2020-21 ஆம் கல்வியாண்டில் தொலைதூரக் கல்வி மற்றும் ஆன்லைன் கல்வி ஆகியவற்றுக்கு அனுமதி வழங்கப்பட்ட உயர் கல்வி நிறுவனங்களும், யுஜிசியின் விதிமுறைகளின்படி தகுதி வாய்ந்த நிறுவனங்களும் அங்கீகாரம் கோரி விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கை அக்.31 வரை நடைபெறும் என யூஜிசி உச்சநீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. +2 மறுதேர்வு முடிவுகள் அக். 10க்குள் வெளியிடப்படும் என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. அக்.10 +2 தேர்வு முடிவுகள் வரை கல்லூரி மாணவர்கள் சேர்க்கையை நீட்டிக்க கோரிய வழக்கில் சிபிஎஸ்இ, யுஜிசி உச்சநீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.
இங்கிலாந்து : பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் முதல் போட்டி தொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட…
சென்னை : சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறனுக்கு அவரின் சகோதரரும் திமுக எம்.பி.,யுமான தயாநிதி மாறன் வக்கீல் நோட்டீஸ்…
இஸ்ரேல் : ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே அதிகரித்து வரும் மோதல் காரணமாக, இஸ்ரேலை விட்டு வெளியேற விரும்பும் இந்தியர்களை வெளியேற்றுவதற்கான…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் டெக்ஸாஸில் எலான் மஸ்க்கிற்கு சொந்தமான 'SpaceX' நிறுவனத்தின் ராக்கெட் வெடித்துச் சிதறியது. டெக்சாஸின் போகா சிகாவிற்கு…
சென்னை : சென்னை ராயப்பேட்டை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகையில் ஜூன் 24, 25ம் தேதிகளில் கழக அமைப்பு ரீதியாக…
மத்திய கிழக்கு : இஸ்ரேலுக்கு எதிரான போரில் கொஞ்சம் கூட கருணை காட்டக் கூடாது என படைகளுக்கு ஈரான் அரசு…