கல்வி கடனாளிகளை சமூக வலைத்தளங்கள் மூலம் தேடி வரும் வங்கிகள் அதிகாரிகள்!

வங்கிகளில் கல்வி கடன் வாங்கி திருப்பி கொடுக்காதவர்களை கண்டுபிடிக்க வங்கிகள் புதிய முறையைஅறிமுகப்படுத்தி உள்ளது.வாங்கி அதிகாரிகள் "டெவலப்பர் அப்ளிகேஷன்

வங்கிகளில் கல்வி கடன் வாங்கி திருப்பி கொடுக்காதவர்களை கண்டுபிடிக்க வங்கிகள் புதிய முறையைஅறிமுகப்படுத்தி உள்ளது.வாங்கி அதிகாரிகள்“டெவலப்பர் அப்ளிகேஷன் புரோகிராம் இண்டர்ஃபேஸ்”ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளது.

unknown node

இந்த“டெவலப்பர் அப்ளிகேஷன் புரோகிராம் இண்டர்ஃபேஸ்”பயன்படுத்தி வங்கிகளில் கல்வி கடன் வாங்கி திருப்பி கொடுக்காதவர்களின் பெயர் , கல்வி தகுதி மற்றும் வேலை விவரங்கள் ஆகியவை வைத்து கொண்டு சமூகவலைத்தளங்களில் தேடி வருகின்றனர்.பிறகு அந்த கணக்கை வைத்து கல்வி கடன் வாங்கி திருப்பி கொடுக்காதவர்களை தொடர்பு கொள்கின்றனர்.

இதற்கு முன் கல்வி கடனை கொடுக்காதவர்களை வங்கில் கொடுத்து உள்ள மின்னஞ்சல் கணக்கு மற்றும் தொலைபேசி எண்ணை வைத்தும் தொடர்பு கொண்டு வந்தனர்.ஆனால் கடன் வாங்கியவர்கள் தொலைபேசி எண்ணை ,வீட்டையும் மாற்றி வந்தனர்.

unknown node

இதனால் அவர்களை தொடர்பு கொள்வதில் மிக சிக்கலாக இருந்தது.இந்நிலையில் வங்கிகள் புதிய முறையை பயன்படுத்தி வருகின்றனர்.பொதுவாக ஒருவர் ஒரு வளையதளத்தில் சென்று ஆராயும் போது மின்னஞ்சல் முகவரி  கொடுக்க வேண்டும்.

இதுபோன்று பதிவிடும் போது மின்னஞ்சல் முகவரி மூலம் அவரின் அடிப்படை தகவல் மற்றும் ஃபேஸ் புக் கணக்குகள் விவரம்  என பல அந்த தளத்தில் பதிவாகும்.அவற்றை கொண்டு வங்கி அதிகாரிகள் கடனை கொடுக்காதவர்களை கண்டு பிடித்து வருகின்றனர்.