கடந்த 6 வருடத்தில் 1,621 கோடியே 40 லட்சம் ரூபாய் நன்கொடையாக வாங்கிய பாஜக!

Published by
murugan

கார்ப்பரேட் நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்ட நன்கொடைகளில் இருந்து 93 சதவீதம் நன்கொடையை  தற்போது மத்தியில் ஆளும் பாரத ஜனதா கட்சி பெற்று உள்ளது என ஆய்வில் கூறப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக, Association for Democratic Reforms என்ற அமைப்பு நடத்திய ஆய்வில் 2016-2017 மற்றும் 2017-2018 ஆகிய ஆண்டுகளில் கார்ப்பரேட் நிறுவனத்திடம் இருந்து அரசியல் கட்சிகளுக்கு மொத்தமாக 1,059 கோடி ரூபாய் நன்கொடை கொடுக்கப்பட்டு உள்ளது.

அந்த 1,059 கோடி ரூபாய் நன்கொடையில் மத்தியில் ஆளும் பாரத ஜனதா கட்சிக்கு மட்டும் 915 கோடியே 59 லட்சம் ரூபாயை ஆயிரத்து 731 கார்ப்ரேட் நிறுவனத்திடம் இருந்து நன்கொடையாக வாங்கி உள்ளது.

இதேபோன்று 151 கார்ப்ரேட் நிறுவனத்திடம்  இருந்து காங்கிரஸ் கட்சி  55 கோடியே 36 லட்சம் ரூபாய் நன்கொடை நன்கொடையாக வாங்கி உள்ளது. 2014-2015 ஆண்டில் கார்ப்ரேட் நிறுவனத்தின் மூலம்  அரசியல் கட்சிகளுக்கு 573 கோடியே 18 லட்சம் ரூபாயும் ,  2016-2017 ஆண்டில் 563 கோடியே 19 லட்சம் ரூபாயும், 2017-2018 ஆண்டில் 421 கோடியே 99 லட்சம் ரூபாயும் நன்கொடையாக  கொடுக்கப்பட்டது என ஆய்வில் கூறப்பட்டு உள்ளது.

இந்நிலையில் கடந்த  ஆறு வருடத்தில் 1,621 கோடியே 40 லட்சம் ரூபாய் மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி நன்கொடையாக  பெற்று உள்ளது என ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2012-13 – 72.99

2013-14 -156.983

2014-15 -408.344

2015-16 -67.49

2016-17 -515.4

2017-18 -400.196

Published by
murugan

Recent Posts

வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!

வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!

ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…

51 minutes ago

தகர்க்கப்பட்ட விமானங்கள்.., பாகிஸ்தான் விமானி உயிருடன் கைது.!

ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…

1 hour ago

எல்லையில் உச்சகட்ட பரபரப்பு – சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள்.!

லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…

2 hours ago

ட்ரோன் அட்டாக் எதிரொலி: இருளில் மூழ்கிய மைதானம்.., பஞ்சாப் – டெல்லி போட்டி பாதியிலேயே நிறுத்தம்.!

தர்மசாலா : இன்று ஐபிஎல் 2025 இன் 58-வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே…

2 hours ago

ஒலித்தது அபாய எச்சரிக்கை: ஜம்மு காஷ்மீர் ஏர்போர்ட்டுக்கு பாகிஸ்தான் குறி… நெத்தியடி கொடுத்த இந்தியா!

பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…

4 hours ago

”இந்தியா பதிலடி கொடுக்க இதுதான் காரணம்” – எடுத்துரைத்த இரு பெண் சிங்கங்கள்.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…

4 hours ago