பீகார் : விவசாயி வங்கி கணக்கில் 52 கோடி – ஏழ்மை நிலையில் உள்ள தங்களுக்கு கொஞ்சம் பணத்தை விட்டு விடுமாறு கோரிக்கை!

The old man has demanded the government to give them some money in view of their poverty situation as Rs 52 crore has been mistakenly credited to the farmer's pension bank account.

விவசாயியின் ஓய்வூதிய வங்கி கணக்கில் 52 கோடி தவறுதலாக ஏற்றப்பட்டுள்ள நிலையில், தங்கள் ஏழ்மை நிலையை கருத்தில் கொண்டு கொஞ்சம் பணத்தை தங்களுக்கு தருமாறு அரசாங்கத்திடம் முதியவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

பீகார் மாநிலத்தில் உள்ள முசாபர்பூர் மாவட்டத்தில் வசித்து வரக்கூடிய விவசாயி ஒருவரின் ஓய்வூதிய வங்கி கணக்கில் 52 கோடி ஏற்றப்பட்டுள்ளது. அவரது வங்கி கணக்கில் அதிக அளவு பணம் இருப்பதை கண்ட முதியவர் இதை தனது வாழ்நாள் முழுவதும் செலவழிக்கலாம் என்ற எண்ணத்தில் மிகவும் சந்தோசமாக இருந்துள்ளது.

அதே போல வங்கிக்கு சென்று தனது கை ரேகையை வைத்து பார்த்த பொழுது 52 கோடிக்கு மேல் அவரது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு உள்ளதாக சிபிஎஸ்இ அதிகாரிகள் கூறியுள்ளனர். இதனால் அவர் ஆச்சரியம் அடைந்தாலும், அந்த தொகை தன்னிடம் இருந்து பெறப்பட்டு விடும் என்பதால் இவர் அரசாங்கத்திடம் கோரிக்கை வைத்துள்ளார்.

அதாவது, நான் என் வாழ்நாளை விவசாயத்திலேயே முழுமையாக கழித்துள்ளேன். ஆனால், நான் ஏழ்மை நிலையில் இருக்கிறேன். எனவே அரசாங்கம் எனக்காக சிறிது பணத்தை விட்டு விடுங்கள் என அவர் கூறியுள்ளார். இதே போல தான் அண்மையில் ஒருவரது வங்கி கணக்கில் தவறுதலாக 5 லட்சம் பணம் ஏற்றப்பட்டிருந்த நிலையில், அவர் அதை செலவழித்து விட்டு பிரதமர் தனக்காக அனுப்பியது என கூறியிருந்தார்.