திருமலை மற்றும் திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள், திருமலையில் உள்ள நாதநீராஞ்சன மண்டபத்தில் உள்ள அஞ்சனாத்ரி மலையில் ஆஞ்சநேயர் பிறந்தார் என்பதை புத்தகமாக அச்சடித்து வெளியிட்டுள்ளனர்.
ஆந்திரா மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று ராமநவமி விழா நடைபெற்றது. இந்த விழாவை ஒட்டி, திருமலையில் உள்ள நாதநீராஞ்சன மண்டபத்தில் உள்ள அஞ்சனாத்ரி மலையில் ஆஞ்சநேயர் பிறந்தார் என்பதை ஆதாரத்துடன் வெளியிடப்படும் என்று திருப்பதி, திருமலை தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
அதன்படி, திருமலையில் உள்ள நாதநீராஞ்சன மண்டபத்தில் உள்ள அஞ்சனாத்ரி மலையில் ஆஞ்சநேயர் பிறந்தார் என்பதை புத்தகமாக அச்சடித்து திருப்பதி, திருமலை தேவஸ்தான அதிகாரிகள் வெளியிட்டனர். அதன்படி, இந்த அப்புத்தகத்தை திருமலை-திருப்பதி தேவஸ்தான முதன்மைச் செயல் அலுவலர் கே.எஸ்.ஜவஹர்ரெட்டி வெளியிட்டார். அதனை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பெற்றுக்கொண்டார்.
அதன்பின் பேசிய அவர், ஆஞ்சநேயர் பிறந்தது அஞ்சனாத்ரி என்பதை புராணம், வாய்வழி, அறிவியல் மற்றும் புவியியல் ஆதாரங்களால் திருப்பதி தேவஸ்தானம் நிரூபித்து, அதுகுறித்து அறிஞர்கள் குழு பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டு தயாரித்த அறிக்கை, ராம நவமி தினத்தில் வெளில்யிட்டுள்ளதாக கூறினார்.
மேலும், ராமர் பிறப்பிடம் அயோத்தி என்று கூறிய அவர், அவரின் பக்தனான அனுமன் பிறந்தது, திருமலை அஞ்சனாத்ரி ஆகும். அதனை திருப்பதி தேவஸ்தானம் அறிவியல் பூர்வமாக நிரூபித்துள்ளதாகவும், தாம் அனுமனின் பக்தன் என்றும், அதற்காக மகிழ்ச்சியடைவதாகவும், அனுமனின் பிறப்பிடம் குறித்து ஆராய 4 மாதங்கள் அயராது உழைத்த அறிஞர்கள் குழுவுக்கு தனது வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி, ‘பீனிக்ஸ்’ திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஏற்கனவே, இந்த…
டெல்லி : 2024 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றது இன்னும் ஒரு மறக்க முடியாத…
கடலூர் : மாவட்டம் சிதம்பரத்தில் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மடப்புரம் பகுதியில் தன்னுடைய குடும்பத்துடன் அர்ஜுனன் என்ற…
மத்தியப் பிரதேசம் : மாநிலத்தின் முதல்வர் கான்வாயில் இருந்த வாகனங்கள், ஜூன் 26, 2025 அன்று ரத்லம் மாவட்டத்தில் நடுவழியில்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமடைந்து அடுத்தகட்டமாக இந்த…
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டு நாட்டிற்கும் இடையே எழுந்த போரின் காரணமாக பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. அந்த பதற்றத்தை…