அசாம் மாநிலத்தின் முதல்வராக ஹிமந்தா பிஸ்வா சர்மா இன்று பதவியேற்றுள்ளார்.சர்மாவுக்கு ஆளுநர் ஜெகதீஷ் முகி உறுதிமொழி வழங்கினார்.
அசாம் மாநில சட்டமன்ற தேர்தலில் மொத்தம் 126 தொகுதிகளில் 75 இடங்களில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றது.இதனையடுத்து ஹிமந்தா பிஸ்வா சர்மா மற்றும் சர்பானந்த சோனாவால் ஆகிய இருவரும் முதல்வர் பதவிக்கு தகுதியானவர்களாக இருந்தனர்.அதனால்,இந்த இரண்டு பேரில் யாரை முதல்வராக தேர்ந்தெடுப்பது என்பது குறித்து டெல்லியில் பாஜகவின் முக்கிய தலைவர்கள் ஆலோசனை நடத்தினர்.
அதன்பின்னர்,நேற்று குவாஹாத்தியில் நடைபெற்ற பாரதிய ஜனதா சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் ஹிமாந்த பிஸ்வா சட்டமன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதனையடுத்து,அசாம் மாநிலத்தின் 15 வது முதல்வராக ஹிமந்தா பிஸ்வா சர்மா இன்று மதியம் 12 மணியளவில் பதவியேற்றுள்ளார்.அசாம் மாநில ஆளுநர் ஜெகதீஷ் முகி இந்த பதவிப்பிரமாணத்தை செய்து வைத்துள்ளார்.இந்த முதல்வர் பதவியேற்பு விழாவில் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் பாஜகவின் பிற தலைவர்களும் கலந்து கொண்டனர்.
வடகிழக்கு மாநிலத்தில் பாஜக மீண்டும் தனது கால்தடத்தை பதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தூத்துக்குடி: தஞ்சாவூரில் இருந்து திருமண நிகழ்ச்சி ஒன்றிற்காக பயணித்து சாத்தான்குளம் வட்டம், மீரான்குளம் பகுதியில் சாலையோரமாக இருந்த 50 அடி…
பெங்களூர் : இந்தியா, பாகிஸ்தான் தாக்குதலால் நிறுத்தப்பட்ட ஐபிஎல் தொடர் மீண்டும் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி…
சென்னை : திருவான்மியூர் - தரமணி சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையின்…
ஹரியானா : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கப்பட்டதிலிருந்து இந்தியாவை உளவு பார்த்ததாகவும், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐக்கு தகவல்களை வழங்கியதாகவும் கூறி, ஹரியானாவில் இதுவரை…
பெங்களூர் : இந்தியா-பாகிஸ்தான் எல்லை பதட்டங்கள் காரணமாக 10 நாள் இடைவெளிக்குப் பிறகு ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்கவுள்ள நிலையில்,…
சீனா : 2019 ஆம் ஆண்டில் உலகையே உலுக்கிய கொரோனா வைரஸ் தொற்று, ஆசியாவின் சில பகுதிகளில் மீண்டும் பரவி…