ரங்கசாமி ஆட்சிக்கு ஆபத்தா..? பாஜகவின் பலம் 9 ஆக உயர்வு..!

புதுச்சேரியில் சட்டசபைக்கு 3 நியமன எம்.எல்.ஏக்களை மத்திய அரசு நியமித்துள்ளது.
30 தொகுதிகளை கொண்ட புதுச்சேரியில் சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் ரங்கசாமி தலைமையிலான என்.ஆர் காங்கிரஸ் 10 இடங்களிலும், பாஜக 6 இடங்களிலும், திமுக 6 இடங்களிலும், காங்கிரஸ் 2 இடங்களிலும், 6 சுயேட்சைகள் வெற்றி பெற்றனர்.
ஆனால், புதுச்சேரியில் ஆட்சியமைக்க 16 இடங்கள் தேவை என்ற நிலையில், என்.ஆர் காங்கிரஸ், பாஜக கூட்டணி ஆட்சியமைத்தது. இந்நிலையில், புதுச்சேரி சட்டசபைக்கு 3 நியமன எம்.எல்.ஏக்களை மத்திய அரசு நியமனம் செய்துள்ளது. அந்த 3 நியமன எம்.எல்.ஏக்களும் பாஜகவை சேர்ந்தவர்கள் மத்திய உள்துறை அமைச்சகத்தால் பாஜகவை சேர்ந்த வெங்கடேசன், ராமலிங்கம், அசோக்பாபு ஆகிய மூன்று பேரை எம்.எல்.ஏ.வாக நியமனம் செய்து நேற்று உத்தரவு வெளியானது.
இதனால், தற்போது புதுச்சேரி சட்டசபையில் பாஜகவின் பலம் 9 ஆக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக புதுச்சேரி அரசியலில் எந்த நேரத்திலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம். காரணம் சட்டசபையில் என்.ஆர். காங்கிரஸுக்கு 10, பாஜகவுக்கு 9 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். இரு கட்சிக்கு கிட்டத்தட்ட 1 எம்.எல்.ஏ தான் வித்தியாசம் என்பதால், 6 சுயேட்சை எம்.எல்.ஏக்கள் உள்ளதால் சுயேட்சை எம்.எல்.ஏக்கள் எந்த பக்கமும் வேண்டுமானாலும் செல்லலாம்.
புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு மீது நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் நியமன எம்.எல்.ஏக்கள் வாக்களித்து ஆட்சியை என்.ஆர்.காங்கிரஸ்,பாஜக மற்றும் அதிமுக அணி கவிழ்த்தது என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
”சதாம் உசேனுக்கு ஏற்பட்ட கதி தான், ஈரான் தலைவருக்கு ஏற்படும்” ஈரானுக்கு இஸ்ரேல் பகிரங்க எச்சரிக்கை.!
June 17, 2025
அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகநாதனின் மகன் ராஜா கைது.!
June 17, 2025
”சாதிவாரி கணக்கெடுப்பு சமூகநீதியை நிலைநாட்ட வேண்டும்” – மத்திய அரசுக்கு விஜய் அறிக்கை.!
June 17, 2025