#Breaking:மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து -10 பேர் பரிதாப பலி!

Published by
Edison

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அகமதுநகர் அரசு மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டதில் 10 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் அகமதுநகர் பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.ஐசியூ பிரிவில் ஏற்பட்ட இந்த தீ விபத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் உட்பட 10 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனையடுத்து,தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து நோயாளிகளை மீட்டுள்ளனர்.ஐசியூவில் குறைந்தது 20-க்கும் மேற்பட்ட  நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்ததாகவும்,இதனால் பலி எண்ணிக்கை உயரும் என்றும் கூறப்படுகிறது.

இதற்கிடையில்,மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள அகமதுநகர் அரசு மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டதில் 10 பேர் உயிரிழ்ந்ததாக அப்பகுதி மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர போசலே தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து,மகாராஷ்டிர சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் தேவேந்திர ஃபட்னாவிஸ், இந்தச் செய்தி குறித்து தனது அதிர்ச்சியை வெளிப்படுத்தியதுடன், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கலையும் தெரிவித்து,ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:

“நகரில் இருந்து மிகவும் அதிர்ச்சியூட்டும் மற்றும் குழப்பமான செய்தி.நகர் சிவில் மருத்துவமனை ஐசியூ தீ விபத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனைகள்.தீவிர விசாரணை நடத்தப்பட்டு, பொறுப்பானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்”,என்று பதிவிட்டுள்ளார்.

 

 

Recent Posts

பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் எழுந்தருளிய கள்ளழகர்.! மதுரை குலுங்க பக்தர்கள் உற்சாகம்.!

பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் எழுந்தருளிய கள்ளழகர்.! மதுரை குலுங்க பக்தர்கள் உற்சாகம்.!

மதுரை : சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, இன்று பெருமாள் கள்ளழகர் வேடம்பூண்டு பூப்பல்லக்கில் பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கும்…

39 minutes ago

ஒழுங்கா வேலை செய்யலைன்னா கடலில் வீசிறுவேன்! கடுமையாக எச்சரித்த பாமக நிறுவனர் ராமதாஸ்!

செங்கல்பட்டு : மாவட்டம் திருவிடந்தை இடத்தில நேற்று பாமக சார்பில் சித்திரை முழு நிலவு, வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு பிரமாண்டமாக…

1 hour ago

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

17 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

18 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

18 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

19 hours ago