கேப்டன் வருண் சிங்கிற்கு உயர்தர சிகிச்சை அளிக்கப்படும் – மத்திய அரசு உறுதி!

The Central Government has said that Captain Varun Singh will be given high quality treatment.

கேப்டன் வருண் சிங்கிற்கு உயர்தர சிகிச்சை அளிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நீலகிரி மாவட்டம் வெலிங்டனில் நடைபெற்ற ராணுவ ஹெலிகாப்டர் விபத்த்தில், விமானத்தில் பயணம் செய்த 14 பேரில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விமானத்தில் பயணித்த கேப்டன் வருண் சிங் மட்டும் 80 சதவீத தீக்காயங்களுடன் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் மேல் பெங்களூர் அழைத்து செல்லப்பட்டார்.

தற்பொழுது கேப்டன் வருண் சிங் பெங்களூர் ராணுவ மருத்துவமனையை அடைந்துள்ளார். அங்கு அவருக்கு உயர்தர சிகிச்சை அளிக்கப்படும் என மத்திய அரசு உறுதியளித்துள்ளது.