ஹீலியம் பலூனில் தனது வளர்ப்பு நாயை கட்டி பறக்கவிட்டு வீடியோ எடுத்து வெளியிட்ட டெல்லியை சேர்ந்த பிரபல யூடியூப்பர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தற்பொழுது சமூக வலைதளங்களில் அதிக அளவில் மக்கள் தங்கள் சொந்த வாழ்க்கையில் நடக்க கூடிய நிகழ்வுகள் மற்றும் தாங்கள் செய்யக்கூடிய வேடிக்கை தனமான காரியங்களை வீடியோவாக வெளியிடுகின்றனர். குறிப்பாக யூடியூபில் பலர் தங்கள் வாழ்க்கை நிகழ்வுகள், தங்கள் வீட்டில் நடப்பவைகளை வீடியோவாக எடுத்து வெளியிட்டு அதன் மூலம் பணம் சம்பாதித்து வருகின்றனர்.இந்நிலையில் டெல்லியை சேர்ந்த கவுரவ் சோன் எனும் யூடியூப் வைத்து நடத்தக் கூடிய இளைஞர் ஒருவர் தினமும் வித்தியாசமான வீடியோக்களை தனது யூடியூப் சேனலில் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
40 லட்சத்துக்கும் அதிகமானோர் இவரது யூடியூப் சேனலை சப்ஸ்கிரைப் செய்துள்ளதோடு இவரது வீடியோக்களும் அதிக அளவில் பார்க்கப்பட கூடியவையாக இருக்கும். இந்நிலையில் அண்மையில் இவரது நாய்க்குட்டியை ஹீலியம் பலூனில் கட்டி பறக்க விட்டபடி வீடியோ ஒன்றை எடுத்து அதை தனது யூடியூப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதைப் பார்த்த பலரும் மிருக வதை செய்வதாக கருத்து தெரிவித்திருந்தனர்.
இந்த வீடியோவிற்கு பல தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். எனவே, உரிய பாதுகாப்பு வசதியுடன் தான் நாய்க்குட்டி பறக்கவிட்டு வீடியோ எடுக்கப்பட்டதாகவும், தான் மிருக வதை செய்யவில்லை என்றும் அவர் விளக்கம் தெரிவித்ததுடன் இதன் மூலம் பிறர் மனம் புண்பட்டிருந்தால் அதற்காக மன்னிப்பும் கேட்டிருந்தார். இருப்பினும் தெற்கு டெல்லியில் உள்ள காவல் நிலையத்தில் யூடியூபர் மீது வழக்குப் பதியப்பட்ட நிலையில் தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. பிறகு…
வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.…
டெல்லி : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும் ‘தி…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலுக்குப் பிறகு, நாட்டின் பாதுகாப்பு நோக்கங்களுக்காக இஸ்ரோவின் 10 செயற்கைக்கோள்கள் தொடர்ந்து கண்காணித்து…
சென்னை : தியாகராய நகர் (T.Nagar) ரங்கநாதன் தெருவில் உள்ள சோபா ஆடையகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவ…
சென்னை : சென்னை பரங்கிமலையில் கல்லூரி மாணவர்கள் இருவர் செல்போன் பேசியபடி தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி…