Supreme Court Chief Justice Chandrachud says about Indian army [File Image]
இன்று உலகம் முழுக்க கிறிஸ்துமஸ் தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவை முன்னிட்டு மதங்கள் கடந்தும் பலரும் தங்கள் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை மக்களுக்கு தெரிவித்து வருகின்றனர். பல்வேறு இடங்களில் கிறிஸ்துமஸ் தின விழா நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
டெல்லியில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் கலந்துகொண்ட கிறிஸ்துமஸ் தின விழா நடைபெற்றது. இதில் பங்கேற்று தலைமை நீதிபதி சந்திரசூட் பேசுகையில், இன்று அனைவரும் கிறிஸ்துமஸ் தினத்தை கொண்டாடி வருகிறோம். இந்த கொண்டாட்டத்திற்கு நடுவில், நமது இந்திய ராணுவ வீரர்களின் தியாகத்தை மறந்துவிட கூடாது.
தொடரும் பதற்றம்.. பூஞ்சில் நிறுத்தப்பட்ட கூடுதல் இராணுவ படைகள்…!
சில நாட்களுக்கு முன்பு நமது ஆயுதப்படையைச் சேர்ந்த 4 ராணுவ வீரர்கள் தாய் நாட்டிற்காக உயிரை விட்டனர். எனவே கிறிஸ்துமஸ் கொண்டாடும் போது, எல்லையில் நின்று நம்மை பாதுகாத்தவர்களை மறந்துவிடக் கூடாது. நம்மையும் நம் தேசத்தையும் காக்கும் ராணுவ வீரர்களுக்காகவும் கிறிஸ்துமஸ் தினத்தை கொண்டாடுவோம் எனவும் சந்திரசூட் தெரிவித்தார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் பகுதியில் கடந்த வியாழக்கிழமை அன்று தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்கள் உத்தரகாண்ட் மாநிலம் சாமோலியைச் சேர்ந்த நாயக் பிரேந்தர் சிங், உத்தரகண்ட் மாநிலம் பவுரி கர்வாலைச் சேர்ந்த ரைபிள்மேன் கவுதம் குமார், உத்தரபிரதேச மாநிலம் கான்பூரைச் சேர்ந்த நாயக் கரண் குமார் மற்றும் பீகார் மாநிலம் நவாடாவை சேர்ந்தவர் சந்தன் குமார் ஆகியோர் என நேற்று (ஞாயிற்று கிழமை) அடையாளம் காணப்பட்டனர்.
சிவகாசி : முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி, இன்று சிவகாசியில் நடந்த அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில், 2026…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய், தி.மு.க. மற்றும் பா.ஜ.க.வின் அரசியல் நாடகங்களை தமிழக மக்கள் ஏற்க…
மலேசியா : தாய்லாந்து - கம்போடியா ஆகிய இரு நாடுகளும் உடனடி போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல் அளித்திருப்பதாக மலேசிய பிரதமர்…
டெல்லி : பஹல்காமில் பொதுமக்கள் மற்றும் ராணுவத்தினரை இலக்காகக் கொண்டு நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்துர்…
சென்னை : மதுரை உயர் நீதிமன்றத்தில் பயிற்சி பெற்ற வழக்கறிஞராகப் பணியாற்றி வரும் வாஞ்சிநாதன், உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.…
ஜார்ஜியா : திவ்யா தேஷ்முக் மகளிர் செஸ் உலகக் கோப்பையை (FIDE Women’s World Cup 2025) வென்று முதல்…