பெண்களுக்கு எதிரான எந்தவொரு கேவலமான வார்த்தைகளும் கேரளாவின் பள்ளி பாடப்புத்தகங்களில் இடம் பெறாது என்று முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்ததை,எம்.பி. கனிமொழி வரவேற்றுள்ளார்.
கேரளாவில் அடுத்தடுத்து இளம் பெண்கள் வரதட்சணைக் கொடுமையால் உயிரிழந்த சம்பவம் பினராயி விஜயன் தலைமையிலான அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில்,மாநிலத்தில் பாலின சமத்துவம் மற்றும் சம உரிமைகளை மேம்படுத்துவதற்காக பெண்களுக்கு எதிரான எந்தவொரு கேவலமான சொற்களும் இடம்பெறாத வகையில்,கேரளாவின் பள்ளி பாடப்புத்தகங்கள் திருத்தப்பட்டு தணிக்கை செய்யப்படும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
மேலும்,இதுகுறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் அவர்கள்,தனது டுவிட்டர் பக்கத்தில் இன்று கூறியதாவது:
“பாலின சமத்துவத்தின் கலாச்சாரத்தை வளர்ப்பதற்கு, கேரளாவின் பள்ளி பாடப்புத்தகங்கள் திருத்தப்பட்டு தணிக்கை செய்யப்படும், இது பெண்களை இழிவுபடுத்தும் சொற்களையும் சொற்றொடர்களையும் சல்லடை செய்யும். எங்கள் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளை பாலின சமத்துவம் மற்றும் சம உரிமைகள் என்ற கருத்தை ஏற்றுக்கொள்ளும் இடங்களாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்”,என்று ட்வீட் செய்துள்ளார்.
இதனையடுத்து,முதல்வர் பினராயி விஜயன் அறிவிப்பை,தமிழக திமுக எம்.பி. கனிமொழி வரவேற்றுள்ளார்.
மேலும்,கனிமொழி அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில்:”நமது மாநிலம் உட்பட அனைத்து மாநிலங்களும் இதைச் செய்யத் தொடங்க வேண்டும்”,என்று கூறி பதிவிட்டுள்ளார்.
கடலூர் : செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதி விபத்துகடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் இன்று (ஜூலை 8, 2025)…
கடலூர் : மாவட்டம் செம்மங்குப்பம் பகுதியில் உள்ள ஆளில்லா ரயில்வே கேட் அருகே இன்று (ஜூலை 8, 2025) காலை…
சென்னை: நாடு முழுவதும் நாளை (ஜூலை 9, 2025) ஆட்டோ மற்றும் பேருந்து சேவைகள் முடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விலைவாசி…
சென்னை : நகரின் மக்கள் தொகை மற்றும் பிற முக்கிய விவரங்களைப் புதுப்பிக்கும் வகையில், இன்று முதல் பயோமெட்ரிக் கணக்கெடுப்பு…
கடலூர் : மாவட்டம் செம்மங்குப்பம் பகுதியில் உள்ள ஆச்சாரியா பள்ளியின் வேன் மீது ரயில் மோதிய விபத்தில் ஒரு மாணவர்…
ஜிம்பாப்வேக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் வியான் முல்டர், 334 பந்துகளில் 367* ரன்கள் குவித்து,…