காத்திருப்போர் பட்டியல் நீக்கமா ? ரயில்வே துறை விளக்கம்

ரயில் திட்ட வரைவறிக்கை தொடர்பாக பல்வேறு செய்தித்தாள்களும் இணையதளங்களும் அதிகளவில் செய்திகள் வெளியாகி வந்த நிலையில் ,ரயில்வே துறை விளக்கம் அளித்துள்ளது.
அதாவது , 2024-ஆம் ஆண்டு முதல் பயணிகள் காத்திருப்போர் பட்டியல் நீக்கப்படும், அல்லது, 2024-ஆம் ஆண்டு முதல் உறுதிசெய்யப்பட்ட பயணச்சீட்டு உடையவர்கள் மட்டுமே ரயிலில் பயணம் செய்ய முடியும் என்று ரயில்வே துறை தெரிவித்துள்ளதாக ஒரு சில செய்தி அறிக்கைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இதற்கு விளக்கம் அளித்துள்ள ரயில்வே துறை, தேவைக்கேற்ப ரயில்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளில் இந்தத் துறை தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகத் தெரிவித்துள்ளது. இதன் மூலம் பயணிகள் காத்திருப்போர் பட்டியலில் இடம் பெறுவது குறைக்கப்படும். ரயிலில் உள்ள மொத்த இருக்கைகளை விட பயணிகளின் எண்ணிக்கை அதிகமாகும் போது காத்திருப்போர் பட்டியல் தயாரிக்கப்படுகிறது. இந்த முறை நீக்கப்படாது என்று தெரிவித்துள்ளது.இருப்பை விட தேவை அதிகமாகும் சமயங்களில் காத்திருப்போர் பட்டியல் பயன்படுத்தப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
இஸ்ரேலில் குடியிருப்புகளில் குண்டு மழை பொழியும் ஈரான்.! கிளஸ்டர் குண்டுகள் என்ன செய்யும்.?
June 20, 2025
தனுஷின் ‘குபேரா’ எப்படி இருக்கு.? நெட்டிசன்கள் என்ன சொல்கிறார்கள்.! இதோ டிவிட்டர் விமர்சனம்.!
June 20, 2025
”பட்டாசு விபத்தில் பலியானவர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும்” – மதுரை கிளை உத்தரவு.!
June 20, 2025