தெலுங்கானாவில் மின் கட்டணம் வசூலிக்க சென்ற மின்சாரத் துறை அதிகாரிகளை கட்டி வைத்த மக்கள்.
தெலுங்கானாவின் மேடக் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்திற்கு மின்சார கட்டணங்களை வசூலிக்க அந்த பகுதிக்கு மின்சாரத் துறை அதிகாரிகள் சென்றுள்ளனர். அப்போது,கொரோனா காலத்தில் வேலை இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் எங்களிடம் எப்படி மின்சார கட்டணம் வசூலிக்கலாம் என அதிகாரிகளிடம் அந்த கிராம மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பின்னர், ஒரு கட்டத்தில் அந்த கிராம மக்களுக்கும் , மின்சாரத் துறை அதிகாரிகளுக்கும் இடையே சண்டை ஏற்பட , கிராம மக்கள் அந்த அதிகாரிகளை கயிறு கொண்டு மரத்தில் கட்டி வைத்து உள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அதிகாரிகளை மீட்டனர்.
இதுதொடர்பாக மேடக் துணை போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ண மூர்த்தி கூறுகையில், தகவல் அறிந்து நாங்கள் உடனடியாக அந்த சம்பவ இடத்தை அடைந்து அதிகாரிகளை விடுவித்தோம். அதிகாரிகள் புகார் அளித்துள்ளனர். அதன் அடிப்படையில், ஐபிசியின் பல பிரிவுகளின் கீழ் ஐந்து பேர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று கூறினார்.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…