எல்லையில் சீனா படைகளை குவிப்பது கவலையளிக்கிறது – ராணுவ தளபதி

Army chief Manoj Mukund Naravane has said that the Indian Army is ready to retaliate against China on the Ladakh border.

லடாக் எல்லையில் சீனாவுக்கு பதிலடி கொடுக்க இந்திய ராணுவ படை தயார் நிலையில் உளது என்று ராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நரவனே தகவல்.

லடாக் எல்லையில் ராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நரவனே திடீரென இன்று ஆய்வு மேற்கொண்டார். லடாக் எல்லையில் சீனா ராணுவ படையை குவித்து வருவதாக இந்தியா குற்றசாட்டியுள்ளது. எனவே சீனாவின் நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியாவும் எல்லையில் ராணுவ படைகளை நிலைநிறுத்தி உள்ளது.

இதனால் இந்தியா – சீனாவு விவகாரத்தில் மோதல் போக்கு உருவாகி வரும் நிலையில், ராணுவ தளபதி மனோஜ் முகுந்த் நரவனே கிழக்கு லடாக் பகுதியில் பாதுகாப்பு பணிகளை ஆய்வு செய்தார். அப்போது பாதுகாப்பு படையினருடன் ஆலோசனை மேற்கொண்டார். இதன்பின் பேசிய ராணுவ தளபதி, லடாக்கில் கிழக்கு, வடக்கு பகுதியில் சீனா தனது படைகளை குவிப்பது கவலையளிக்கிறது.

சீனப் படைகளின் நகர்வு மற்றும் ஆப்கானிஸ்தான் நிலை குறித்து தொடர்ந்து கண்காணித்து வருகிறோம் என்றும் பதிலடி நடவடிக்கைக்கு இந்திய ராணுவ வீரர்கள் தயார் நிலையில் இருக்கிறார்கள் எனவும் கூறினார். அக்டோபர் 2வது வாரத்தில் நடக்கும் 13வது சுற்று பேச்சுவார்த்தையில் எல்லை பிரச்சனைக்கு தீர்வு கிடைக்க வாய்ப்பு இருப்பதாகவும் குறிப்பிட்டார்.