காங்கிரஸின் கூட்டணி பலத்துடன் ஜார்கண்டில் ஆட்சி அமைக்கிறது ஜே.எம்.எம்!

Published by
மணிகண்டன்
  • ஜார்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் – ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி பெரும்பான்மையுடன் கூட்டணி ஆட்சி அமைக்க உள்ளன.
  • ஜே.எம்.எம் கட்சி சார்பாக ஹேமந்த் சோரன் முதல்வராக பொறுப்பேற்க உள்ளார்.

ஜார்கண்ட் மாநிலத்தில் கடந்த நவம்பர் மாதம் 30ஆம் தேதி முதல் டிசம்பர் 20ஆம் தேதி வரை 5 கட்டமாக அம்மாநிலத்தில் உள்ள 81 தொகுதிகளுக்கான சட்டமன்ற தேர்தல் நடைபெற்றது. இதன் முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன.

இந்த தேர்தலை ஆளும் பாஜக தனியாக போட்டியிட்டது. காங்கிரஸ் கட்சியானது ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா ( ஜே.எம்.எம் ) கட்சியுடன் இணைந்து கூட்டணியுடன் தேர்தலை சந்தித்தன.

அதில் காங்கிரஸ் – ஜே.எம்.எம் கூட்டணி 46 இடங்களை கைப்பற்றியுள்ளன. இதில் ஜே.எம்.எம் கட்சியானது 30 தொகுதிகளில் வென்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 16 இடங்களில் வென்றுள்ளது. அதே போல பாஜக அரசானது 25 இடங்களில் வென்றிருந்தது. பெரும்பாண்மை நிரூபிக்க 41 இடங்கள் இருந்தால் போதுமானது.

இதன் மூலம் காங்கிரஸ் கூட்டணி ஜார்கண்டில் ஆட்சியமைக்க உள்ளது. அதிக தொகுதிகளை கைப்பற்றிய ஜே.எம்.எம் கட்சி சார்பாக ஹேமந்த் சோரன், ஜார்கண்ட் மாநில முதல்வராக பொறுப்பேற்க உள்ளார். இந்த தகவலை ஜார்கண்ட் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் தெரிவித்துள்ளார்.

ஜார்கண்டில் காங்கிரஸ் கூட்டணியின் இந்த வெற்றிக்கு பல கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Published by
மணிகண்டன்

Recent Posts

பாகிஸ்தானின் 4 விமான தளங்கள் மீது இந்தியா தாக்குதல்! போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன!

பாகிஸ்தானின் 4 விமான தளங்கள் மீது இந்தியா தாக்குதல்! போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன!

டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் இருந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா…

7 minutes ago

அதிகரிக்கும் போர் பதற்றம்., 32 விமான நிலையங்கள் மூடல்! மொத்த லிஸ்ட் இதோ…

டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆப்ரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரிக்க…

1 hour ago

டார்கெட் வைத்த 26 பாகிஸ்தான் ட்ரோன்கள்! சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம்!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.…

2 hours ago

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…

12 hours ago

”மகன்களைக் கைவிட்ட ரவி மோகன்.., வீட்டை விட்டு வெளியேற்றுகிறார்” – கொந்தளித்த ஆர்த்தி.!

சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…

12 hours ago

”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!

டெல்லி :  ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

12 hours ago