Categories: இந்தியா

தேர்தல் ஓவர்.! இந்தியா கூட்டணி தலைவர்களுக்கு அழைப்பு விடுத்த கார்கே.!

Published by
மணிகண்டன்

மத்தியில் கடந்த 2 நாடாளுமன்ற பொதுத்தேர்தலிலும் வெற்றி பெற்று பலமான ஆளும் கட்சியாக உருவெடுத்துள்ள பாஜகவை வீழ்த்த, காங்கிரஸ், திமுக, ராஷ்டிரிய ஜனதா தளம், ஆம் ஆத்மி , திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட 26 எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா (I.N.D.I.A) எனும் மெகா கூட்டணியை உருவாக்கினர்.

இந்த இந்தியா கூட்டணியின் முதல் கூட்டம், பீகார் தலைநகர் பாட்னாவில் பீகார் முதல்வரும் ராஷ்டிரிய ஜனதா தள கட்சி தலைவர் நிதிஷ்குமார் அழைப்பின் பெயரில் நடைபெற்றது.  அதன் பிறகு ஜூலையில் பெங்களூருவில் காங்கிரஸ் தலைமையில் இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்துகொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதன் பிறகு   மும்பையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டங்களில் இந்தியா எனும் கூட்டணி பெயரும், ஒவ்வொரு கட்சியில் இருந்தும் ஒருங்கிணைப்பாளர் என தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

ராஜஸ்தானில் இழுபறி.. காங்கிரஸ் – பாஜக இடையே கடும் போட்டி.!

அதன் பிறகு டெல்லியில் இந்தியா கூட்டணி கட்சிகளின் ஒருங்கிணைப்பாளர்கள் ஆலோசனை கூட்டமும் நடைப்பெற்றது. இதனை அடுத்து 5 மாநில சட்டமன்ற தேர்தல் நெருங்கிய காரணத்தால், இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டம் என்பது தள்ளிவைக்கப்பட்டு இருந்தது.  தற்போது 5 மாநில தேர்தல் முடிந்து இன்று 4 மாநில தேர்தல் முடிவுகள் வெளியாகி கொண்டு இருக்கிறது.

இந்நிலையில், இன்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் 5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிந்துள்ளதால், அடுத்து நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் கவனம் செலுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது. வரும் டிசம்பர் மாதம் 6ஆம் தேதி டெல்லியில் இந்தியா கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது எனவும் அதில் கட்சி தலைவர்கள் பங்கேற்க வேண்டும் எனவும் அறிவிவுறுத்தியுள்ளார்.

4 மாநில தேர்தல் முடிவுகளில் தெலுங்கானாவில் முதன் முதலாக காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றி இருந்தாலும், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம்  ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகிறது. அங்கு பாஜக முன்னிலை வகித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

இனிமே ஆஸ்திரேலியாவில் சிறுவர்கள் யூடியூப் சேனல் நடத்த தடை! அதிரடி உத்தரவு!

சிட்னி : ஆஸ்திரேலிய அரசு, 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ஸ்னாப்சாட், டிக்டாக், மற்றும் எக்ஸ் ஆகிய சமூக வலைதளங்களைப்…

11 hours ago

ரூ.5.37 கோடி கொடுக்கவில்லை…மதராஸி படக்குழுவினர் மீது புகார் கொடுத்த நிறுவனம்!

சென்னை : இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள மதராஸி திரைப்படம் வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி மிகப்பெரிய…

12 hours ago

இபிஎஸ் அழுத்தத்தால் ஓபிஎஸ் புறக்கணிக்கப்படவில்லை …விளக்கம் கொடுத்த நயினார் நாகேந்திரன்!

சென்னை : தேசிய ஜனநாயக கூட்டணியில் (NDA) இருந்து முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) வெளியேறியது குறித்து தமிழக…

13 hours ago

தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் எச்சரிக்கை!

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, 01-08-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன்…

15 hours ago

எதுக்கு குல்தீப் யாதவை எடுக்கவில்லை? டென்ஷனான கங்குலி!

லண்டன் : இங்கிலாந்துக்கு எதிராக நடந்து வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி, நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர்…

15 hours ago

விஜய் சேதுபதிக்கு பிளாக் பஸ்டர்…ரூ.50 கோடி வசூல் செய்த “தலைவன் தலைவி”!

சென்னை : இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் நடித்த ‘தலைவன் தலைவி’ திரைப்படம்…

16 hours ago