Categories: இந்தியா

வயநாட்டில் வேட்புமனு தாக்கல்.! மக்கள் வெள்ளத்தில் ராகுல் காந்தி.!

Published by
மணிகண்டன்

Rahul Gandhi : கேரளா வயநாடு தொகுதியில் இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி.

தமிழகத்தில் 39 தொகுதிகள் புதுச்சேரி என 40 தொகுதிகளுக்கும் வரும் ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி முதற்கட்ட தேர்தல் நாளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது போல, அண்டை மாநிலமான கேரளாவில் உள்ள 20 மக்களவை தொகுதிகளுக்கும் இரண்டாம் கட்ட தேர்தல் நாளான ஏப்ரல் 28ஆம் தேதி அன்று வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இதற்கான வேட்புமனு தாக்கல் செய்யும் நிகழ்வு தற்போது கேரளாவில் நடைபெற்று வருகிறது. கடந்த 2019இல் அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் முக்கிய தலைவர் ராகுல் காந்தியை வெற்றிபெற செய்த வயநாடு தொகுதியில் தான் இந்த முறையும் ராகுல் காந்தி போட்டியிட உள்ளார்.

இதற்காக இன்று காலை வேட்புமனு தாக்கல் செய்ய வயநாடு வந்து இருந்தார் ராகுல் காந்தி. அவருடன் பிரியங்கா காந்தி, கே.சி.வேணுகோபால் ஆகியோர் உடன் வந்திருந்தார். அதன் பிறகு வயநாடு ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணியாக சென்றார் ராகுல் காந்தி.

வழிநெடுகிலும், காங்கிரஸ் தொண்டர்கள் ராகுல் காந்தி புகைப்படம் , காங்கிரஸ் கட்சி கொடிகள் ஆகியவற்றுடன் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதன் பிறகு மக்கள் மத்தியில் உரையாற்றிவிட்டு, பின்னர் வயநாடு தேர்தல் அலுவலரிடம் தனது வேட்புமனுவை அளித்தார் ராகுல் காந்தி.

இவரை எதிர்த்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜா அவர்களின் மனைவி ஆனி ராஜா போட்டியிடுகிறார். அவரும் இன்று வயநாடு தொகுதியில் போட்டியிட தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

Recent Posts

இனிமே ஆஸ்திரேலியாவில் சிறுவர்கள் யூடியூப் சேனல் நடத்த தடை! அதிரடி உத்தரவு!

சிட்னி : ஆஸ்திரேலிய அரசு, 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ஸ்னாப்சாட், டிக்டாக், மற்றும் எக்ஸ் ஆகிய சமூக வலைதளங்களைப்…

2 hours ago

ரூ.5.37 கோடி கொடுக்கவில்லை…மதராஸி படக்குழுவினர் மீது புகார் கொடுத்த நிறுவனம்!

சென்னை : இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள மதராஸி திரைப்படம் வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி மிகப்பெரிய…

3 hours ago

இபிஎஸ் அழுத்தத்தால் ஓபிஎஸ் புறக்கணிக்கப்படவில்லை …விளக்கம் கொடுத்த நயினார் நாகேந்திரன்!

சென்னை : தேசிய ஜனநாயக கூட்டணியில் (NDA) இருந்து முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) வெளியேறியது குறித்து தமிழக…

4 hours ago

தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் எச்சரிக்கை!

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, 01-08-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன்…

6 hours ago

எதுக்கு குல்தீப் யாதவை எடுக்கவில்லை? டென்ஷனான கங்குலி!

லண்டன் : இங்கிலாந்துக்கு எதிராக நடந்து வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி, நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர்…

6 hours ago

விஜய் சேதுபதிக்கு பிளாக் பஸ்டர்…ரூ.50 கோடி வசூல் செய்த “தலைவன் தலைவி”!

சென்னை : இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் நடித்த ‘தலைவன் தலைவி’ திரைப்படம்…

7 hours ago