மகாராஷ்டிராவில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11,000-ஐ கடந்தது!

Default Image

மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 266 பேர் கொரோனா வைரஸ் தாக்கத்தால் உயிரிழந்த நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11ஆயிரத்தை கடந்தது.

இந்தியாவில் பொறுத்தவரை, மகாராஷ்டிராவில் தான் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. இதனால் சில கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது. அந்த வகையில் இன்று ஒரே நாளில் 8,641 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2,84,281 ஆக அதிகரித்துள்ளது.

இன்று 266 பேர் கொரோனவால் உயிரிழந்த நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11,194 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 5,527 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால், குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,58,140 ஆக உயர்ந்துள்ளது.

அதுமட்டுமின்றி, மகாராஷ்டிராவில் 1,14,648 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Harry Brook and Jamie Smith partnership
student -10th mark
tvk manimaran
Harry Brook - Jamie Smith
vijay - chennai hc
Dog Bite Rabies