144 தடையை மீறிய ஆளுங்கட்சி எம்எல்ஏ..பாய்ந்தது கிரிமீனல் வழக்கு-போலீசார் அதிரடி

Published by
kavitha

“புதுச்சேரி காங்கிரஸ் எம்எல்ஏ ஜான்குமார் மீது 144 தடை உத்தரவை மீறியதாக அவர் மீது கிரிமீனல் வழக்கு பதியப்பட்டுள்ளது”.

புதுச்சேரி மாநிலத்தில் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வருகிறது.இந்நிலையில் நெல்லித்தோப்பு  சவரிபடையாட்சி வீதியில் வசித்து வருபவர் காங்கிரஸ் எம்எல்ஏ ஜான்குமார். கொரோனா வைரஸ் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளால் மக்கள் காய்கறிகளை வாங்க முடியாமல் இருப்பதால் அவர் அப்பகுதி மக்களுக்கு தனது வீட்டு முன்பு காய்கறி விநியோகம் செய்து உள்ளார்.இதனால் அவர் வீட்டு முன்பு சற்று நேரத்தில் கூட்டம் கூடியுள்ளது. இத்தகவல் அறிந்து வந்த உருளையன்பேட்டை போலீசார் விரைந்து சென்று கூடியிருந்த மக்களை கலைந்து செல்ல அறிவுறுத்தினர். மேலும் 144 தடை அமலில் இருக்கும் போது மக்கள் கூட்டத்தை கூட்டியதால்  ஜான்குமார் எம்எல்ஏ மீது இந்திய தண்டனை சட்டம் 269, 188 மற்றும் பேரிடர் மேலாண்மை சட்டம், தொற்று நோய் பரவுதல் தடுப்பு சட்டம் ஆகிய சட்டங்களின் கீழ் கிரிமினல் வழக்குகளை போலீசார்  பதிவு செய்துள்ளனர்.இது குறித்து புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி சட்டத்தின் முன் அனைவரும் சமம். சட்டத்தை மீறுபவர்கள் உயர் பதவியில் இருந்தாலும் அவர்கள் மீது  நடவடிக்கை உறுதி என கூறி உள்ளார். 200-க்கும் மேற்பட்டோரை வீட்டு முன் கூட்டி பொருட்களை விநியோகம் செய்தது தொற்று நோய் பரவுதல் தடுப்பு சட்டத்திற்கு எதிரானது.
சட்டத்தை பின்பற்றாமல் அதை மீறிய ஆளுங்கட்சி எம்எல்ஏ மீது கிரிமீனல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது அனைவருக்கும் ஒரு தெளிவான செய்தி, சட்ட விதிகளை கடைபிடிப்பது அந்த சட்டத்தை உருவாக்குபவர்களின் பெரிய பொறுப்பு என கிரண்பேடி தெரிவித்துள்ளார்.

Recent Posts

பாகிஸ்தான் தாக்குதல்., காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்! 

பாகிஸ்தான் தாக்குதல்., காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்!

காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…

31 minutes ago

தாக்குதல் நடத்திய பாகிஸ்தான்… சில்லி சில்லியாய் நொறுக்கிய இந்தியா.! சிதறி கிடக்கும் ஏவுகணை, ட்ரான் பாகங்கள்.!

டெல்லி : இந்தியாவின் எல்லையோர குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதலை தொடுத்துள்ளது. இதனை இந்திய ராணுவம் பெரும்பாலும் முறியடித்தாலும்,…

52 minutes ago

பாகிஸ்தான் ராணுவ முகாம்களை தாக்கி அழித்த காட்சிகளை வெளியிட்டது இந்திய ராணுவம்.!

டெல்லி : பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி அதனை தரைமட்டமாக்கிய காட்சிகளை இந்திய ராணுவம் வெளியிட்டது. ஜம்மு -…

1 hour ago

விராட் கோலி ஓய்வு? பிசிசிஐ உடன் ரகசிய பேச்சுவார்த்தை..,

டெல்லி : இந்திய கிரிக்கெட் உலகின் மிக முக்கிய அடையாளமாக விளங்குபவர் விராட் கோலி. ரசிகர்களால் 'கிங்' கோலி என…

2 hours ago

“தொடர்ந்து தவறான தகவல்களை பரப்பி பொய்ப் பிரச்சாரம் செய்யும் பாகிஸ்தான்” – விக்ரம் மிஸ்ரி.!

டெல்லி : எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தியது பற்றியும் ஆபரேஷன் சிந்தூர் தற்போதைய நிலை குறித்தும் டெல்யில் இன்று…

2 hours ago

ராணுவத்திற்கு உதவ நாங்க தயார்! சண்டிகரில் குவியும் இளைஞர்கள்!

சண்டிகர் : காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதல், அதற்கு பதிலடியாக பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர்…

2 hours ago