இந்தியாவில் கொரோனா தொற்று சமூக பரவலாகி விட்டதா? என்பதை குறித்து ஆய்வு செய்ய மத்திய சுகாதார அமைப்பு முடிவு செய்துள்ளது.
கொரோனா வைரஸ் நாடு முழுவதும் தீவிரமடைந்து வருகிறது. இதனால் பாதிப்பும், உயிரிழப்பும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. கொரோனா தொடர்பான அறிவிப்புகளை மத்திய சுகாதார அமைப்பு தினந்தோறும் வெளியிட்டு வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதே வழி என்று கூறிருந்த நிலையில், உலக நாடுகள் அனைத்தும் மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. இதனிடையே கொரோனா தொற்று இந்தியாவில் சமூக பரவலாக மாறிவிட்டதா என்று கேள்வி எழுந்தது. ஆனால், கொரோனா வைரஸ் சமூக பரவலாக மாறவில்லை என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவிதது.
இந்நிலையில், தற்போது இந்தியாவில் கொரோனா தொற்று சமூக பரவலாகி விட்டதா? என்பதை குறித்து ஆய்வு செய்ய மத்திய சுகாதார அமைப்பு முடிவு செய்துள்ளது. அதன்படி, நாடு முழுவதும் 69 மாவட்டங்களில் கொரோனா குறித்து ஆய்வு நடத்த உள்ளது. இந்த சோதனை மத்திய சுகாதார துறையுடன் இணைந்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் ஆய்வு நடத்துகிறது. ஒவ்வொரு மாவட்டத்தின் 10 இடங்களில் இருந்து 400 ரத்த மாதிரிகளை சேகரித்து ஆய்வு செய்ய திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் சென்னை, கோவை மற்றும் திருவண்ணாமலை ஆகிய 3 மாவட்டங்களில் ஆய்வு நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கடலூர் : சிதம்பரம் நடராஜர் கோயில் தரிசன விவகாரம் தொடர்பாக, கனகசபையில் பக்தர்கள் தரிசனம் செய்வது குறித்து சென்னை உயர்…
சென்னை : தமிழ்நாட்டில் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் ஆகிய 2 மாதத்தில் இயல்பிற்கு அதிகமாக மழைப் பொழிவு பதிவாகும் என…
சென்னை : பாஜக கூட்டணியிலிருந்து விலகுவதாக பன்னீர்செல்வம் அறிவித்த நிலையில், முதல்வர் ஸ்டாலினை அவரது வீட்டில் சந்தித்தார். இன்று காலையில்…
சென்னை : இன்று காலை தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறினார் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அதிகார்பூர்வமாக அறிவித்தார். சமீபத்தில்,…
ஓவல் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் ஐந்தாவது மற்றும் இறுதிப்…
நெல்லை : தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலம் பகுதியைச் சேர்ந்த பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் கவின் செல்வகணேஷ் (வயது…