டெல்லி எய்ம்ஸில் கொரோனா தடுப்பூசிக்கான மிகப்பெரிய மனித சோதனை.!

Published by
மணிகண்டன்

இந்தியாவிலேயே அதிக அளவில் மனித சோதனைக்கு உட்படுத்தப்படும் நம்நாட்டில் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பு மருந்தின் முதற்கட்ட மனித சோதனை டெல்லியில் திங்களன்று தொடங்கவுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், இந்த வைரஸை அழிப்பதற்கு உலக நாடுகள் மருந்து கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளது. இதனிடையே தான்  ஹைதராபாத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் பாரத் பயோடெக் என்னும் நிறுவனமும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகமும் இணைந்து, கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பு மருந்தை உள்நாட்டிலேயே உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில், இந்திய மருத்துவ ஆராய்ச்சி குழுவான ஐ.சி.எம்.ஆர் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள கோவிட்-19 தடுப்பு மருந்தினை மனிதர்களுக்கு கொடுத்து சோதனைப்படுத்த டெல்லி எய்ம்ஸ் மருத்துவ கழகத்திடம் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.

இதன்படி, வரும் திங்களன்று இந்திய ஏஜென்சிகள் தயாரித்த கொரோனா தடுப்பு மருந்துகளை டெல்லி எய்ம்ஸ் மருத்தவ மையத்தில் மனிதர்களுக்கு கொடுத்து சோதனை நடத்தப்பட உள்ளது.

குறைந்தது 100 தன்னார்வலர்கள் இந்த சோதனைக்கு உட்படுத்தப்படுவர் என தகவல் வெளியாகின. பாரத் பயோடெக் சார்பில் வெளியான தகவலின்படி, 370 தன்னார்வலர்கள் இந்த கொரோனா தடுப்பு மருந்து மனித சோதனைக்கு தயாராகியுள்ளனர் என கூறப்பட்டுள்ளது.

இந்தியாவிலேயே அதிக அளவில் மனித சோதனைக்கு உட்படுத்தப்படும் இந்த கொரோனா தடுப்பு மருந்தின் முதற்கட்ட மனித சோதனை டெல்லியில் திங்களன்று தொடங்கவுள்ளது. மொத்தம் 3 கட்டங்களாக இந்த சோதனை நடைபெற உள்ளது.

Published by
மணிகண்டன்

Recent Posts

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…

2 hours ago

”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!

வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…

2 hours ago

”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…

2 hours ago

”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!

சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…

3 hours ago

பாக். தாக்குதல்.. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் – உமர் அப்துல்லா அறிவிப்பு.!

காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…

4 hours ago

பாகிஸ்தான் தாக்குதல்., காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்!

காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…

6 hours ago