கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 33,610 ஆகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,074 ஆகவும் உயர்ந்துள்ளது.
நாடு முழுவதும் மே 3 ஆம் தேதியுடன் ஊரடங்கு நிறைவடைய உள்ள நிலையில், கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால் ஊரடங்கு மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய நிலவரப்படி கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 33,610 ஆகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,074 ஆகவும் உயர்ந்துள்ளது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 8,373 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என மத்திய சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்திய மாநிலங்களில் மகாராஷ்டிராவில் தான் கொரோனா பாதிப்பு அதிகம். இங்கு பாதித்தவர்களின் எண்ணிக்கை 9,915 ஆகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 432 ஆகவும் உள்ளது. மகாராஷ்டிராவில் 1,593 பேர் குணமடைந்து உள்ளார்கள். இதையடுத்து அதிக பாதிக்கப்பட்ட மாநிலமாக குஜராத்தில் 4,082, டெல்லியில் 3,439, மத்திய பிரதேசத்தில் 2,660, ராஜஸ்தானில் 2,438, தமிழ்நாட்டில் 2,323 ஆக உள்ளது. இதனிடையே உலகளவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 32,44,586 ஆகவும், பலியானோர் எண்ணிக்கை 2,29,182 ஆகவும் உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்ட 32,44,586 பேரில் 10,16,419 பேர் குணமடைந்து உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…
சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…
டெல்லி : ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…
டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…
மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…