வரும் 31 ஆம் தேதி வரை ஊரடங்கு அமலில் இருப்பதால் அனைத்து தேர்வுகளையும் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைப்பதாக கேரளா அரசு அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரம் காரணமாக கடந்த மார்ச் 24 ஆம் தேதி முதல் நான்கு கட்டங்களாக மே 31 வரை பொதுமுடக்கம் அமலில் உள்ளது. இதனால் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவங்களும் மூடப்பட்டு, நடைபெற இருந்த தேர்வுகள் அனைத்தும் ஒத்துவைக்கப்பட்டது. இந்த நிலையில், சிபிஎஸ்இ மற்றும் நீட் போன்ற தேர்வுகளின் தேதி அண்மையில் அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து தமிழகத்திலும் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் சில தேதி மாற்றம் செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், கேரளாவில் தற்போது குறைந்து வரும் கொரோனா வைரஸ் பரவலை அதிகரிக்க விரும்பவில்லை என்று அம்மாநில அரசு, தேதிகள் ஏதும் குறிப்பிடாமல் அனைத்து தேர்வுகளையும் ஒத்தி வைத்துள்ளது. நாட்டிலேயே கேரளா தான் குறைவான பாதிப்பு மற்றும் இறப்பு விகிதம் கொண்டுள்ளது. இதனிடையே, மே 26 ஆம் தேதி பள்ளி தேர்வுகளும், ஜூலை மாதத்தில் பல்கலைக்கழக தேர்வுகளும் நடைபெற இருப்பதாக அம்மாநில அரசு அறிவித்தது. தேர்வு எழுந்தும் மாணவர்களுக்கு பேருந்து வசதி ஏற்பாடு செய்யவும் முடிவு எடுக்கப்பட்டது. ஆனால் வரும் 31 ஆம் தேதி வரை ஊரடங்கு அமலில் இருப்பதால் அனைத்து தேர்வுகளையும் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைப்பதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
கோழிக்கோடு : கேரளா மாநிலம் கோழிக்கோடு பகுதியில் உள்ள அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் நேற்று அவசர சிகிச்சை பிரிவு…
கோவா : நேற்று (மே 2) கோவாவில் உள்ள ஒரு கோயில் திருவிழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 7…
காஷ்மீர் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் , பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர்…
சென்னை : தி.மு.க தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில், சென்னை அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் இன்று (மே 3)…
கோவா : ஷிர்கானில் ஆண்டுதோறும் நடைபெறும் தேவி லாராய் ஜாத்ராவின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி ஏழு பேர்…
பெங்களூர் : இந்த சீசனின் 52வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மீண்டும்…