சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலக முழுவதும் 150க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. கொரோனாவால் உலகளவில் பாதித்தவர்களின் எண்ணிக்கை 5,32,262 ஆக அதிகரித்துள்ளது. மேலும் உயிரிழப்பின் எண்ணிக்கை 24,089 ஆக உயர்ந்துள்ளது. இதில் 1,24,332 பேர் குணமடைந்துள்ளனர் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் கொரோனா வைரஸ் இந்தியாவில் வேகமாக பரவி வருவதால், நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் இந்தியாவில் வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு (144 தடை) அமல்படுத்தப்பட்டுள்ளது. இன்று காலை 10 மணி நிலவரப்படி இந்தியாவில் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 724 ஆக உயர்ந்து, பலி எண்ணிக்கை 17ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனா வைரஸிலிருந்து 66 பேர் குணமடைந்துள்ளார்கள் என மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
இந்தியாவில் அதிகபட்சமாக கேரளா 137, மகாராஷ்டிரா 131, கர்நாடகா 55, தெலுங்கானா 45, குஜராத் 43, ராஜஸ்தான் 41, உத்தரப்பிரதேசம் 41, டெல்லி 36, பஞ்சாப் 33, ஹரியானா 30, தமிழ்நாடு 29 என 724 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதியானது. மேலும் மகாராஷ்டிரா 4, குஜராத் 3, கர்நாடகா 2, பீகார், டெல்லி, இமாச்சல பிரதேஷ், ஜம்மு, மத்தியபிரதேசம், பஞ்சாப், தமிழ்நாடு, மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் உயிரிழந்து, மொத்தம் 17 பேர் கொரோனாவால் பலியாகியுள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சென்னை : நடிகர் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி, ‘பீனிக்ஸ்’ திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஏற்கனவே, இந்த…
டெல்லி : 2024 டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி சிறப்பாக விளையாடி கோப்பையை வென்றது இன்னும் ஒரு மறக்க முடியாத…
கடலூர் : மாவட்டம் சிதம்பரத்தில் அதிர்ச்சியடைய வைக்கும் வகையில் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மடப்புரம் பகுதியில் தன்னுடைய குடும்பத்துடன் அர்ஜுனன் என்ற…
மத்தியப் பிரதேசம் : மாநிலத்தின் முதல்வர் கான்வாயில் இருந்த வாகனங்கள், ஜூன் 26, 2025 அன்று ரத்லம் மாவட்டத்தில் நடுவழியில்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமடைந்து அடுத்தகட்டமாக இந்த…
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டு நாட்டிற்கும் இடையே எழுந்த போரின் காரணமாக பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. அந்த பதற்றத்தை…