கேரளாவில் கோரத்தாண்டவம் ஆடும் கொரோனா.! பாதிப்பு எண்ணிக்கை 40 ஆக உயர்வு.!

சீனாவில் தொடங்கிய கொரோனா இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் ஒவ்வொரு மாநிலமாக பரவி வருவதால் மத்திய அரசு கொரோனாவை தேசிய பேரிடராக அறிவித்தது. இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 223 ஐ எட்டியுள்ளது. அதில் 32 பேர் வெளிநாட்டவர்கள் என்று தெரிவித்துள்ளது. உயிரிழப்பின் எண்ணிக்கை ஒரு வெளிநாட்டவர் உட்பட 5 பேர் பலியாகியுள்ளனர்.
இந்த நிலையில் கொரோனவால் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 49 பேரும் கேரளாவில் 2 வெளிநாட்டவர்கள் உட்பட 28 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது மேலும் 12 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். அதில் எர்ணாகுளத்தில் 5, காசர்கோடு 6 மற்றும் பாலக்காட்டில் ஒருவர் என கேரள மாநிலத்தில் மொத்தம் 40 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என அறிவித்துள்ளார். மேலும் கேரளாவில் மொத்தம் 44,390 பேர் கண்காணிப்பில் உள்ளனர். அதில் 44,165 பேர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணித்து வருகிறது என்றும் 225 மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது என்று தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025