கொரோனோ பாதுகாப்பு ஊரடங்கு…சரக்கு ரயிலில் பதுங்கி சென்ற 50க்கும் மேற்பட்டோர் அதிரடியாக கைது…

Published by
Kaliraj
உயிர்கொல்லியான கொடிய கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் தொற்றின் காரணமாக நாடு முழுவதும் 887 பேருக்கு இந்த வைரஸ் பரவியுள்ளது. இந்நிலையில்,  கொரோனோ வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த நாடு முழுவதும் மார்ச் மாதம் 25 முதல் ஏப்ரல் 14-ம் தேதி வரை 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு  அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக நாடு முழுவதும்  ரெயில் சேவைகள், பேருந்து சேவை, விமான சேவை என அனைத்தும்  ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், டெல்லியில் இருந்து ஹவுராவுக்கு இயக்கப்படும் சரக்கு ரெயிலில் சிலர் பதுங்கி வருவதாக உத்தரபிரதேச மாநில ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.  இதையடுத்து அந்த மாநிலத்தின் இட்வா ரெயில் நிலையத்திற்கு சரக்கு ரெயில் வந்த போது அதில் ரயில்வே பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடியாக  சோதனை நடத்தினர். அந்த சோதனையின் போது அந்த சரக்கு ரெயிலில் பதுங்கி இருந்த 50-க்கும் அதிகமானோரை ரெயில்வே பாதுகாப்பு படையினர் கையும் களவுமாக பிடித்தனர்.  பிடிபட்ட நபர்களிடம் நடத்திய அதிரடி  விசாரணையில் அவர்கள் அனைவரும் உத்தரபிரதேசம்  மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என்பதும்,  அவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல  இவ்வாறு சரக்கு ரெயிலில் பதுங்கி பயணம் செய்தனர் என்று விசாரனையில் தெரிய வந்தது.
இதையடுத்து, அந்தந்த மாவட்டத்தை சேர்ந்த அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டு  பிடிபட்ட நபர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டது.
Published by
Kaliraj

Recent Posts

வலுவிழந்தது தாழ்வு மண்டலம்.., ”இன்று 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட்” – வானிலை அப்டேட்..!

வலுவிழந்தது தாழ்வு மண்டலம்.., ”இன்று 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட்” – வானிலை அப்டேட்..!

சென்னை : வங்கதேசம், மேற்கு வங்கத்தில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவிழந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.…

2 minutes ago

நான்தான் பாமக தலைவர்.! ‘பாமக தனி நபரின் சொத்தும் கிடையாது’ – அன்புமணி திட்டவட்டம்.!

சென்னை : நேற்றைய தினம் அன்புமணிக்கு பக்குவமோ, தலைமைப் பண்போ இல்லை என்றும், வளர்த்த கடா மார்பில் பாய்ந்துவிட்டது என்றும்…

26 minutes ago

திலகபாமா நீக்ககிய ராமதாஸ்.., ‘பாமக பொருளாளராக தொடர்வார்’ – அன்புமணி அதிரடி அறிவிப்பு.!

சென்னை : ராமதாஸ், அன்புமணி இடையே மோதல் அதிகரித்த நிலையில், திலகபாமா அன்புமணிக்கு ஆதரவாக இருந்தார். இந்த நிலையில், பாமக…

46 minutes ago

ஆர்பிஐ நியூ ரூல்ஸ்: நகைக்கடன் விதிகளை தளர்த்த மத்திய அரசு பரிந்துரை.!

டெல்லி : இந்திய ரிசர்வ் வங்கி (RBI) கடந்த மாதம் தங்கக் கடன் வாங்குவது தொடர்பாக புதிய விதிகளை வெளியிட்டது.…

1 hour ago

”கொள்ளையடித்த பணத்தை வண்டி வண்டியா கொட்ட போறாங்க” – தவெக தலைவர் விஜய்.!

சென்னை : சென்னை மாமல்லபுரத்தில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில், கல்வி விருது விழா இன்று (மே 30) நடைபெற்று…

4 hours ago

தாய்லாந்தில் இந்தியரை தாக்கிய புலி… வைரலாகும் ஷாக்கிங் வீடியோ.!

பாங்காக் : தாய்லாந்தின் ஃபூகெட்டில் உள்ள பிரபலமான சுற்றுலா பூங்காவில் ஒரு இந்திய மனிதனை புலி தாக்கும் அதிர்ச்சியூட்டும் வீடியோ…

4 hours ago