கொரோனா ஊரடங்கால் வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் தொழிலாளர்களை மீட்க மத்திய அரசு புதிய ஏற்பாடு…

Published by
Kaliraj

உலகம் முழுவதும் கொடிய கொரோனா வைரஸ் தொற்று  ஏற்பட்டு திகைத்து நிற்கும் இந்த சூழலில் அனைவரும் தாங்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் நிலையில் உள்ளனர். இந்நிலையில்  வெளிநாடுகளில் வேலையின்றி சிக்கித் தவித்து இந்திய தொழிலாளர்களை மீட்க அரசு முடிவு செய்துள்ளது. எனவே வெளிநாடுகளில் உள்ள இந்திய தொழிலாளர்கள் மீண்டும்  தாயகம் திரும்ப விரும்புபவர்களை படிப்படியாக மீட்டு அழைத்து வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன்படி வரும் 7-ம் தேதி மீட்டு வருவதற்கான பயணம் தொடங்குகிறது. இதற்காக, தாயகம் திரும்ப விரும்பும் இந்தியர்கள் பட்டியலை வெளிநாட்டிலுள்ள இந்திய தூதரகங்கள் தயாரித்துள்ளன. இந்த பயணத்தில்  கட்டண அடிப்படையில் இந்த வசதி அளிக்கப்படுகிறது. வர்த்தக விமானம் ஏற்பாடு செய்யப்படும் என்றும்,  விமானத்தில் ஏறுவதற்கு முன் ஒவ்வொருவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்படும் என்றும்,  கொரோனா அறிகுறி இல்லாதவர்கள் மட்டும் விமானத்தில் ஏற அனுமதிக்கப்படுவர் என்றும்,  விமானத்தில் மத்திய சுகாதார அமைச்சகம், மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் ஆகியவை வகுத்த விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என மத்திய அரசின் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், இந்த பயணத்தின் மூலம் அவரவர் இருப்பிடத்தை அடைந்தவுடன், ஒவ்வொருவரும் ‘ஆரோக்ய சேது’ என்ற மத்திய அரசின் செயலியில் தாங்களை  பதிவுசெய்து கொள்ள வேண்டும் என்றும், இந்தியா வந்தவுடன் அங்கும் அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்படும். பின்னர், இவர்கள் மருத்துவமனையிலோ அல்லது மருத்துவ முகாமிலோ அவர்கள் கட்டண அடிப்படையில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள். 14 நாட்களுக்கு பிறகு அவர்களுக்கு  கொரோனா தொற்று பரிசோதனை நடத்தப்படும். அதன் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இதுதொடர்பான விவரங்களை இந்திய வெளியுறவு அமைச்சகமும், சிவில் விமான போக்குவரத்து அமைச்சகமும் விரைவில் தங்கள் இணைய தளத்தில் வெளியிடும் என்று  தெரிவித்துள்ளது.

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

7 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

8 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

9 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

9 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

11 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

12 hours ago