ரேணி குண்டா ரயில் நிலையத்தில் காணாமல் போன பூனையை கடந்த 20 நாள்களாக தேடி வரும் குஜராத் தம்பதி.குஜராத்தில் உள்ள சூரத் நகரை சார்ந்த ஜியாஸ் பாய் , மீனா தம்பதி இவர்கள் கடந்த 17 வருடங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர்.
சூரத்தில்ஜியாஸ் பாய் துணி வியாபாரம் செய்து வருகிறார்.இவர்களுக்கு குழந்தை இல்லாததால் கடந்த ஒரு ஆண்டுகளாக ஒரு பூனையை தங்களது குழந்தை போல வளர்ந்து வந்து உள்ளனர்.அந்த பூனைக்கு பாபு என பெயரும் வைத்து உள்ளனர்.
இந்நிலையில் கடந்த 09-ம் தேதி திருப்பதியில் உள்ள சுவாமி ஏழுமலையான் கோவிலுக்கு தங்கள் பூனையுடன் இந்த தம்பதி வந்து உள்ளனர்.பின்னர் சுவாமி தரிசனம் செய்து விட்டு 13-ம் தேதி ரேணி குண்டா ரயில் நிலையத்திற்க்கு வந்து உள்ளனர்.அப்போது தங்கள் மகனாக வளர்ந்து வந்த பூனை காணாமல் போனதும் அதிர்ச்சியடைந்து உள்ளனர்.
இந்த தம்பதி பல இடங்களில் பூனையை தேடியும் கிடைக்கவில்லை.இந்த வாய்ப்பை பயன்படுத்தி சிலர் பூனையை கண்டுபிடித்து தருவதாக கூறி ரூ.50, 000 வரை மோசடி செய்து உள்ளனர். இருந்தாலும் தங்கள் மகனாக வளர்ந்த பூனை (பாபு ) கிடைக்கவில்லை என கண்ணீருடன் காத்திருக்கின்றனர்.
ரயில்வே போலீஸ் பூனையை கண்டுபிடித்து தருவதாக கூறியும் ரயில்வே நிலையத்தில் பூனை கிடைக்கும் வரை போகமாட்டோம் என கூறி கட்டிய துணியுடன் காத்திருக்கின்றனர்.
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானிடமிருந்து சீனா தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யலாம் என்று தனது Truth…
பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கட்சியின் ஆதரவாளர்கள் எந்த பக்கம் செல்வது…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய், வரும் ஆகஸ்ட் 15, 2025 முதல் தமிழ்நாடு முழுவதும்…
சென்னை : தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான தனுஷ், தனது சமீபத்திய படங்களான ராயன் மற்றும் குபேரா மூலம் தொடர்ந்து இரண்டாவது…
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் தற்போது நீடித்து வருகிறது. சில நாட்களுக்கு முன் இரு…
லீட்ஸ் : இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.…